பக்கங்கள்

21 பிப்ரவரி 2011

சமீரா ரெட்டியை நடுங்க வைத்த ராத்திரி!

கௌதம் மேனன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் நடுநிசி நாய்கள். இதில் சமீரா ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் பாடல்கள் இல்லை. நள்ளிரவில் நடக்கும் திரில்லர் கதையாக இந்தப் படம் இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடு ராத்தியில் சமீரா அலறியடித்து பயந்து போனது எதற்காக தெரியுமா? துப்பாக்கிகளும் கத்திகளும் தன்னை சூழ்ந்ததற்கும் வீரா என்ற கதாபாத்திரம் துரத்தி வந்ததற்கும் அவர் பயப்படவே இல்லை.
ஏன், தண்ணி தொட்டியில் மூழ்க வைத்து சுற்றி பெரிய நான்கு நாய்களை நிறுத்தியபோது கூட அவர் பயப்படவே இல்லை. ஆனால் படத்தில் வீரா கதாபாத்திரம் அவர் தலை முடியை வெட்டுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. அந்த காட்சியில் தன் உண்மையான முடியை வெட்டி விடுவார்களோ என்று நினைத்துக் கொண்ட சமீரா அலறியடித்து கொண்டு கதறிக் கதறி அழுதிருக்கிறார்.
ஷூட்டிங் சமயம் யூனிட்டே வேடிக்கையாக சிரித்ததாம். அவ்வளவு நாள் வளர்த்த முடியை வெட்டுனா எந்தப் பொண்ணுக்குதான் கண்ணிர் வராது. அந்த ராத்திரி தான் சமீராவுக்கு மறக்க முடியாத ராத்திரியாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக