பக்கங்கள்

14 பிப்ரவரி 2011

காதலர் தினத்தில் ஜெனிலியாவின் காதலுக்கு பச்சைக்கொடி!

காதலர் தினத்தில் ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது. தனது காதலரும் நடிகருமான ரிதேஷ் தேக்முக்கை திருமணம் செய்து கொள்ள இருதரப்பிலும் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவருக்கும் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலை மணமகன் வீட்டார் எதிர்த்தனர். ஒரு நடிகை தனக்கு மருமகளாக வருவதா என்று வெளிப்படையாக கண்டித்தார் விலாஸ்ராவ் தேஷ்முக் மனைவி. மேலும் ஜெனிலியாவுக்கும் மிரட்டல்கள் வந்தன. ஆனால் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர் இருவரும்.
இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இவ்வருடத்திலேயே இந்த திருமணம் நடைபெற உள்ளது, ஒரு நிபந்தனையுடன். 'திருமணத்துக்கு பின் நடிக்கக் கூடாது' என்பதுதான் அந்த நிபந்தனை. இதற்கு ஜெனிலியாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது கைவசம் உள்ள படங்களை விரைவாக ஜெனிலியா முடிக்கிறார்.
படங்கள் ரிலீசான கையோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு திருமணம் செய்கிறார்.
இப்போது காதலுக்கு பெற்றோர் சம்மதித்ததைத் தொடர்ந்து ஜெனிலியாவும் ரிதேஷும் இன்று காதலர் தினத்தை பார்ட்டி வைத்துக் கொண்டாடுகிறார்களாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக