பக்கங்கள்

25 ஜனவரி 2011

அமலாவின் வாயால் வந்த வினை!

முளைச்சு ஒன்றரை இலை விடுவதற்குள் அலப்பறையை ஆரம்பித்தவர் அமலா பால். அதற்கான அறுவடை வேகவேகமாக கிடைத்து வருகிறது.
அமலாவுக்கு மைனா படம் திருப்புமுனையாக அமைந்த போது பலரும் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். ஆனால் விக்ரம் படத்தில் கமிட்டானதும் இவர்களை துச்சமாக நினைக்க‌த் தொடங்கினார் அமலா. விளைவு?
களவாணி படத்தின் இயக்குனர் சற்குணம் தனது அடுத்தப் படத்தில் அமலாவை ஒப்பந்தம் செய்திருந்தார். ஓவர் அலட்டல் காரணமாக அவரை தற்போது படத்திலிருந்தே நீக்கியிருக்கிறார்.
அதேபோல் முருகதாஸ், ஹாலிவுட் நிறுவன கூட்டுத் தயா‌ரிப்பில் சரவணன் இயக்கும் படத்திலிருந்தும் அமலாவுக்கு கல்தா கொடுத்திருக்கிறார்கள். அந்த வேடத்தில் அனன்யா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக