பக்கங்கள்

10 ஜூலை 2011

ஜெனிலியா வீட்டில் சம்மதம் கிடைத்தது.

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் “துங்கே மேரி கஸம்” என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.
ரிதேஷ் தேஷ்முக் முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ரிதேஷின் தந்தை காதலர்களை பிரிக்க கடும் முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் காதலில் உறுதியாக இருந்தனர். ரகசியமாக சந்தித்து வந்தார்கள்.
சமீபத்தில் டோரன்டோவில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் கைகோர்த்தபடி நடந்து சென்று காதலை உறுதிபடுத்தினர். அருகருகே உட்கார்ந்து விழாவை கண்டு களித்தனர்.
காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. பட விழாவில் ரிதேசும் ஜெனிலியாவும் நெருக்கமாக உட்கார்ந்து இருந்தபோது ஜெனிலியாவின் தாயாரும் உடன் இருந்தார்.
ஜெனிலியாவுக்கு தற்போது இரண்டு இந்திப் படங்கள் கைவசம் உள்ளன. “போர்ஸ்” என்ற படத்தில் ஜான் அபிரகாமுடனும் இன்னொரு படத்தில் அபிஷேக்பச்சனுடனும் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக