பக்கங்கள்

05 ஜூலை 2011

சீறும் ஸ்ரேயா.

சென்னை நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்ற நடிகை ஸ்ரேயா, குடிபோதையில் குத்தாட்டம் போட்டதாக வெளியான செய்தியை அவரே மறுத்துள்ளார். சர்ச்சையின் நாயகியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. சினிமா வாய்ப்புகள் இருக்கிறதோ... இல்லீயோ...? அம்மணியைப் பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் செய்தி கொஞ்சம் மோசமான செய்திதான். நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் உலா வருகின்றன. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று அளவுக்கு மீறி குடித்து போதையில் தள்ளாடினாராம் ஸ்ரேயா. விருந்து முடிந்து அளவுக்கதிகமான போதையில் கீழே விழப்போன ஸ்ரேயாவை அவரது தோழிகள்தான் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் உட்கார வைத்ததாக செய்திகள் வெளியாயின.
இந்த செய்தியைப் படித்ததும் கொதித்துப் போன ஸ்ரேயா, "நான் போதையில் தள்ளாடியதாகவும், ஆட்டம் போட்டதாகவும் செய்தி பரவி இருப்பது வேதனையளிக்கிறது. எனக்கு எதிராக இது போன்ற அவதூறு பரப்பியவர்களை சும்மா விடமாட்டேன். நான் நட்சத்திர ஹோட்டல் பப்களுக்கு அபூர்வமாகத்தான் போவேன். கடந்த சில நாட்களாக எந்த பப்புக்கும் போகவில்லை. மதுவும் அருந்தவுமில்லை. என்னைப் பற்றி இது போன்று வதந்திகளை பரப்பியது யார் என்று தெரியவில்லை. இன்டர்நெட்டில் நான் குடித்து விட்டு ஆடுவது போன்று படம் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் செய்து அந்த போட்டோவை வெளியிட்டுள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று கூறியுள்ளார்.
போற போக்கைப் பார்த்தால் சர்ச்சைகளில் சிக்குவதில் த்ரிஷாவை முந்தி விடுவார் போலிருக்கிறதே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக