பக்கங்கள்

11 ஜூன் 2011

ஸ்ருதியை தாக்கும் நித்யா.

கமலின் கலைவாரிசு, ஸ்ருதிஹாசனுக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் நெருக்கம் இருந்து வருவதாக டோலிவுட் மீடியா தொரந்து எழுதி வந்தது. இந்த கிசு கிசு விவகாரத்தை இரண்டுபேரும் மறுத்து வந்ததோடு, இது என் தனிப்பட்ட விஷயம் என்று கமல் பாணியில் திமிராக பதில் சொல்லி வந்தார் வருகிறார் சித்தார்த்.
‘அகனாக ஒக்க தீருடு ‘ என்ற தெலுங்கு தோல்விப் படத்தில் சேர்ந்து நடித்த இவர்கள் இருவரும், வம்படியாக ‘ஓ மை பிரண்ட் ‘ என்ற தெலுங்குபடத்தில் ஜோடி சேர்ந்திருகிறார்கள்.
இந்த படத்துக்கு கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, சித்தார்த்துடன் போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்ட நிலையில், படத்திலிருந்து நீக்கப்பட்டார் நித்தியாமேனன். சித்தார்த்தின் வற்புறுத்தலால்தான் நித்தியா நீக்கப்பட்டதாக டோலிவுட் மீடியா எழுதியதை சித்தார்த்த எதுவும் பேசவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட கதாநாயகியான நித்தியாவே முன்வந்து உண்மையை தைரிடமாக உடைத்து, ஸ்ருதியைத் தாக்கியுள்ளார்.
தற்போது தமிழில் ‘வெப்பம், ‘180’ படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் மலையாள கலைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவர் வெப்பம் படத்தின் பேச் ஒர்க் படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்துக்கொண்டனர். அப்போது “என்னை மலையாள நடிகை என்று எழுதாதீர்கள். நான் படம் இயக்குனர் ஆகவே பெரிதும் விரும்புகிறேன். என்றாலும் கன்னடத்தில்தான் நான் முதலில் நடிகை ஆனேன்.
பிறகு மலையாள படத்தில்தான் நாயகி ஆனேன். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய நான்குமொழிப் படங்களிலும் நடித்துவருகிறேன்.இப்போது சொல்லுங்கள் என்னை மலையாள நடிகை என்று சொல்வதில் அர்த்தமிருகிறதா? தெலுங்கு ஹீரோ வெங்கடேஷின் படத்தில் நடிக்க மறுத்ததைப் பற்றி கேட்கிறார்கள்.
அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் அதிகம். படத்தில் எங்களைப் பார்த்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் மறுத்தேன். ‘180’ படத்துக்குப் பிறகு சித்தார்த்துடன் நான் நடிக்க வேண்டிய தெலுங்கு படம் ‘ஓ மை பிரண்ட்’. கடைசி நேரத்தில் நான் நீக்கப்பட்டது ஏன் என்று கேட்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். சித்தார்த், ஸ்ருதிஹாசனுடன் நடிக்க விரும்பினார். அதனால் நான் நீக்கப்பட்டேன். நான் நீக்கப்பட்டதற்கு ஸ்ருதிஹாசனே காரணம்” என்று தைரியமாக பேசுகிறார் நித்தியா மேனன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக