பக்கங்கள்

04 ஜூன் 2011

பணத்தைக் காட்டியதும் ஓக்கே சொன்ன த்ரிஷா.

மலையாளத்தில் பாடிகார்ட் என்ற பெயரில் உருவாகி, பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தற்போது தெலுங்கில் பாடிகார்ட் என்ற பெயரிலேயே தயாராகிறது.
பாடிகார்ட் படத்தில் செக்ஸியான காட்சிகள் எதுவும் கிடையாது. இயல்பான கதையோட்டத்தைக் கொண்ட அப்படத்தை பெரிய அளவில் கொம்பாக்காமல் தமிழிலும் சற்று இயல்பாக எடுத்ததால் அப்படம் பெரிய ஹிட் ஆனது.
இந்த நிலையில், தெலுங்கு பாடிகார்டில் பெரிய அளவில் மசாலாவை சேர்த்து இணைக்கவுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. படத்தில் ஒரு காட்சியில் பிகினி உடையில் அவரை உலவ விட்டுள்ளனர்.
இந்தக் காட்சியில் நடிக்க முதலில் தயங்கியுள்ளார் திரிஷா. எக்ஸ்டிராவாக தருவதாக தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தெரிவிக்கவே சம்மதித்துள்ளாராம் திரிஷா. இந்தக் காட்சியில் நடிப்பதற்காக எக்ஸ்டிராவாக ரூ. 25 லட்சத்தை வாங்கியுள்ளாராம் திரிஷா.
தெலுங்கில் தற்போது நாயகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. போட்டியை சமாளிக்க கவர்ச்சிக் களத்தில் குதித்து ரசிகர்களை இழுப்பதில் நாயகிகளிடையே பெரும் அடிதடியே காணப்படுகிறது. இந்த நிலையில்தான் போட்டிக் களத்தில் திரிஷாவும் இப்படிக் குதித்துள்ளாராம்.
அதை விட முக்கியம் இது தெலுங்குப் படமாச்சே, கவர்ச்சி மசாலா இல்லையென்றால் எப்படி...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக