பக்கங்கள்

31 ஜனவரி 2011

கவர்ச்சிக்கு ஆசைப்படும் அஞ்சலி!

குடும்பப் பாங்கான நடிகை என்று எழுதுவதைப் படிக்கும் போது இனித்தாலும், பைசா மேட்டர் என்று வந்தால், கவர்ச்சி நடிகைகளுக்கு மட்டும்தான் ஏகத்துக்கும் 'மீட்டர்'!
சினேகா போல ஓரிரு நடிகைகள்தான் கடைசி வரை முழு கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டு நடிப்பைத் தொடர்கிறார்கள். மற்றவர்கள் முதல் படத்தில் முத்தழகியாக வந்து, அடுத்தடுத்த படங்களில் முற்றும் துறந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். சினிமா அப்படி!
இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றுள்ளவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழில் அறிமுகமானாலும், அங்காடி தெருதான் இவருக்கு விலாசம் கொடுத்தது. இடையில் ஆயுதம் செய்வோம் படத்தில் கவர்ச்சி காட்ட முயன்றார். படம் பப்படமாகிவிட்டது.
இப்போது வரிசையாக பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எதிர்ப்பார்த்த 'ரேட்' கிடைத்தபாடில்லை. எனவே மீண்டும் கவர்ச்சி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் அஞ்சலி.
"இப்போதுதான் பெரிய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. மகிழ்ச்சியாக உள்ளது. அழுது வடிகிற பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சிலர் நம்பிக்கொண்டுள்ளனர். இதை மாற்றத்தான் கவர்ச்சியான வேடங்களாக இருந்தாலும் உடனே ஒப்புக் கொள்கிறேன்.
அஜீத்துடன் மங்காத்தா படத்திலும் நடிக்கிறேன். ஏ.ஆர். முருகதாஸ், படமொன்றிலும் நடிக்கிறேன்...", என்றார்.

28 ஜனவரி 2011

கண் பார்வையற்றோருக்கு உதவுங்கள்-ஸ்ரேயா.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து, பின் இந்தி, ஆங்கிலம் என வெவ்வேறு மொழிகளில் ஒரு ரவுண்ட் வந்த ஸ்ரேயாவிற்கு தமிழில் இப்போது கைவசம் உள்ள படம் ரவுத்திரம். ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்திப் பட உலகில் அதிகம் இருப்பதுபோல தன்னைக் காட்டிக் கொள்கிறார் ஸ்ரேயா. அப்படியும் வாய்ப்பு மட்டும் எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே ஓய்வு நேரத்தில் யோகா, பொது நலப் பணிகள் என உபயோகமாகக் கழிக்க முடிவு செய்துள்ளார்.
இப்போது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து உதவுமாறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் ஸ்ரேயா.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "பார்வையற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திட வேண்டும். அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் புதிய வழிகளைத் திறக்கலாம்.
போதிய கல்வி மற்றும் பயிற்சிகள் அளித்து வேலைவாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். வருத்தமான விஷயம் என்னவென்றால் யாருமே பார்வையற்றோருக்கு வேலை கொடுப்பதில்லை. சமூகம் அவர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வு நீங்கும். என்னால் முடிந்த அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்," என்றார்.
ஏற்கெனவே சில ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி அளித்து வருகிறார் ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களில் அதிகம் தலை காட்டுவதில்லையே என்று கேட்டதற்கு, "நானாகத்தான் குறைத்துக் கொண்டேன். நல்ல கதை, பேசப்படும் அளவுக்குப் பாத்திரம்... இதுதான் முக்கியம். பணம் பெரிதல்ல...", என்றார்.

25 ஜனவரி 2011

அமலாவின் வாயால் வந்த வினை!

முளைச்சு ஒன்றரை இலை விடுவதற்குள் அலப்பறையை ஆரம்பித்தவர் அமலா பால். அதற்கான அறுவடை வேகவேகமாக கிடைத்து வருகிறது.
அமலாவுக்கு மைனா படம் திருப்புமுனையாக அமைந்த போது பலரும் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். ஆனால் விக்ரம் படத்தில் கமிட்டானதும் இவர்களை துச்சமாக நினைக்க‌த் தொடங்கினார் அமலா. விளைவு?
களவாணி படத்தின் இயக்குனர் சற்குணம் தனது அடுத்தப் படத்தில் அமலாவை ஒப்பந்தம் செய்திருந்தார். ஓவர் அலட்டல் காரணமாக அவரை தற்போது படத்திலிருந்தே நீக்கியிருக்கிறார்.
அதேபோல் முருகதாஸ், ஹாலிவுட் நிறுவன கூட்டுத் தயா‌ரிப்பில் சரவணன் இயக்கும் படத்திலிருந்தும் அமலாவுக்கு கல்தா கொடுத்திருக்கிறார்கள். அந்த வேடத்தில் அனன்யா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

23 ஜனவரி 2011

வயிற்றுக்கு பிரச்சனையின்றி சாப்பிடும் முறை!

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும்.
எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.
அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த ‌சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.
சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.
நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.
சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.
பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

19 ஜனவரி 2011

மன அழுத்தத்தில் இருந்து விடுபடவேண்டுமானால் கட்டிப்பிடியுங்கள்!

வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்?
ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.
சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர்.
எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மனு அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.
இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள்.
அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.
இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன்.

17 ஜனவரி 2011

சீமான்,சத்தியராஜ் இணையும் சட்டப்படி குற்றம்!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் சட்டம் ஒரு இருட்டறை. 1981 இல் வெளிவந்த இந்தப் படம் அந்த நேரத்தில் பெரிய ஹிட். இதை இப்போது 'சட்டப்படி குற்றம்' என்ற தலைப்பில் அவரே ரீமேக் செய்ய இருக்கிறார். இதில் சீமான், சத்யராஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஏற்கெனவே இவர் இயக்கத்தில் அமீர் நடிப்பதாக இருந்தது. ஆனால், நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டு அதன் பிறகு எஸ்கேப் ஆகிவிட்டார் அமீர்.
நீண்ட நாள் கழித்து எஸ்.ஏ.சி நடிப்பில் நடிப்பதில் சத்யராஜுக்கு சந்தோஷமாம். சீமானும் தன் கோபத்தை காட்ட நல்ல வாய்ப்பாக இது இருக்கும் என்று நினைக்கிறாராம். படத்தை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி இயக்க இருக்கிறாராம் எஸ்.ஏ.சி. சென்னையிலும் ஈரோடு காட்டு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். தன் மகன் விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு வேலைகளில் இப்போது பிசியாக இருக்கிறார் எஸ்.ஏ.சி. பொங்கலுக்கு பிறகு மாநாடு. அதன் பிறகு சட்டப்படி குற்றம்...

14 ஜனவரி 2011

கருத்தரித்த பெண்கள் கைபேசி பாவித்தால் பிள்ளைகள் முரடர்கள் ஆவார்களாம்.

கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மொபைல் போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது:
மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர். உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.
இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு லீகா கூறினார்.

12 ஜனவரி 2011

கமலின் மகள் என்பதால் எனக்கு பொறுப்பு அதிகம்!

கலையை என் தந்தையிடமும் ஒழுக்கத்தை தாயிடமும் கற்றேன். அதே நேரம் தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே தீரணும் என்பார் என் தந்தை கமல்ஹாஸன். இதை மனதில் வைத்துள்ளேன், என்றார் நடிகை ஸ்ருதி.
கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நடிகையானது என் சிறு வயது கனவு இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்ப பிடிக்கிறது. இசையமைப்பது கடினமான வேலை.
கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும், ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள்.
என் அழகு ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாக தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும் முகத்தை அடிக்கடி சுத்தம் செய் வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன்.
சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன். தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத், என்னை வைத்து ஒரு படம் இயக்க விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார்.
தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். அதேநேரம் என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் எதுவும் அவர் சொல்வதில்லை,"என்றார்.

09 ஜனவரி 2011

காதல் தெரிவில் எச்சரிக்கையாக இருங்கள்!

நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல் விஷயத்தில் எச்சரிக்கை மனப்பான்மை வேண்டும்.
உங்களை காதலிப்பதாகக் கூறும் இளைஞன் உங்கள் அழகை மட்டுமே வர்ணிப்பவனாக இருந்தால் அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்கள் அழகு எந்தச் சமயத்திலும் பின்னாளில் குறையக்கூடும். திருமணமான பிறகு அழகு குறைந்தபோது உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்த இளைஞன் ஏமாற்றமுற்று தடம் மாறக்கூடும்.
அழகாக கவர்ச்சியாக இருக்கிறான் என்பதற்காக எந்த ஓர் இளைஞனையும் பெண்கள் காதலிக்கக் கூடாது. அழகு என்பது இனிப்பு பலகாரங்களுக்கு போடப்படும் வண்ணம் போன்றது. வண்ணம்தான் பண்டத்திற்குக் கவர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் வண்ணம் இல்லாததினாலேயே தின்பண்டத்தின் சுவை கெட்டுவிடப் போவதில்லை.தின்பண்டத்தில் கலந்துள்ள இனிப்பு போன்றது ஓர் இளைஞனின் குண நலன்கள். இனிப்பு இல்லாவிட்டால் தின்பண்டமே இல்லை என்பது போல, வாழ்க்கைக்கு எழில் சேர்ப்பது கணவராக வருபவரின் குணநலன்தான்.
ஆகவே தங்கள் காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.

07 ஜனவரி 2011

இப்படியும் சாதித்திருக்கிறார் இவர்!

2500 பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்று அறிவித்து உள்ளார் பிரித்தானிய பிரஜையான போல் பின்ற் என்பவர். உலகில் அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் என்று உரிமை கொண்டாடுகின்றார். இவர் பெண்களை மயக்குகின்றமைக்காக உயர் தொழில் வசிப்பவர் போலவும், கோடீஸ்வர வர்த்தகர் போலவும் காட்டிக் கொள்வர்.குறிப்பாக வைத்திய ஆலோசகர், பாரிஸ்டர், வங்கியாளர் போன்ற பதவிகளை வகிக்கின்றவர் போல வேடம் இட்டு ஒரு தொகை பெண்களை ஏமாற்றி இருக்கின்றார். இவரின் வண்டவாளம் அகப்பட்டமையால் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையை விட்டு வெளியேறி வந்த நிலையிலேயே அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற உரிமையைக் கொண்டாடுகின்றார்.

02 ஜனவரி 2011

அரண்டு போயிருக்கும் தமன்னா!

அமலா பால் மற்றும் ஹன்சிகா மோத்வானியின் படு வேக வளர்ச்சியைப் பார்த்து தமன்னா அரண்டு போயிருக்கிறாராம். தன்னைத் தேடி வர வேண்டிய சில வாய்ப்புகள் அமலாவையும், ஹன்சிகாவையும் நோக்கி திரும்பியதால் அப்செட்டும் ஆகியுள்ளாராம்.
மைனா படத்தின் மூலம் உயரத்திற்கு வந்துள்ளார் அமலா பால். இப்போது கோலிவுட்டில் அவருக்குத்தான் செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதேபோல விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் இணைந்துள்ள ஹன்சிகாவுக்கும் பெரும் கிராக்கியாகியுள்ளது.
கவர்ச்சியாக நடிக்க சற்றும் வெட்கப்படுவதோ, தயங்குவதோ கிடையாதாம் ஹன்சிகா. இதனால்தான் அவருக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மறுபக்கம் அமலா பால் பிசியாகி வருகிறார். அவரைத் தேடி பிரபல நடிகர்களின் படங்களும் ஓடி வர ஆரம்பித்துள்ளன. இதனால் வருகிற வாய்ப்புகளை வளைத்துப் போட ஆரம்பித்துள்ளார் அமலா.
இது தற்போது முதலிடத்தில் இருக்கும் தமன்னாவை கவலைக்குள்ளாக்கியுள்ளது. தனக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் அமலாவைத் தேடி போனதால் அப்செட் ஆகி விட்டாராம் தமன்னா.
இந்தப் போட்டியை சமாளிக்கவும், தனது நிலையை ஸ்திரமாக்கவும் அவர் சில திட்டங்களுடன் தீவிரமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

01 ஜனவரி 2011

காணொளியில் நித்தியானந்தாவுடன் நானில்லை.

நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை. அது ஜோடிக்கப்பட்ட பொய்யான காட்சி என்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ரஞ்சிதா.
நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில், அவரது படுக்கையறையில் நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சியை போலீசார் பல்வேறு ரசாயண சோதனைகளுக்கு உட்படுத்தியதில், அந்தக் காட்சி எந்த ஒட்டு வேலையும் இல்லை, உண்மையானதுதான் என்று போலீசார் கர்நாடக நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு நடிகை ரஞ்சிதா வெளியில் வந்துள்ளார். கர்நாடக நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான ஆவர், இன்று பெங்களூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், "நித்யானந்தாவுடன் செக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள பெண் நானல்ல. அவை அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. நித்யானந்தாவும் நானும் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. என்னை அவ்வாறு அவர் அணுகியதில்லை.
எனக்கு ஒன்றுமே தெரியாது. பத்திரிகைகளைப் பார்த்துதான் இத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். நான் நித்யானந்தாவின் பக்தை. இந்த உறவு தொடரும்.
நான் தலைமறைவாகவில்லை. உண்மையில் நான் மிரட்டப்பட்டேன். அதனால்தான் அமெரிக்காவுக்குப் போய்விட்டேன். 18 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இப்போதும் எனக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன", என்றார் ரஞ்சிதா.

29 டிசம்பர் 2010

ரத்த சரித்திரம் படத்தில் நடித்தது என் தப்புத்தான்.-ப்ரியாமணி.

ரத்த சரித்திரம் படத்தில் நடித்தது என் தப்புதான். இனி இந்த மாதிரி படங்களில் நடிக்கமாட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ப்ரியாமணி.
பருத்திவீரன் படம் மூலம் மறு வாழ்வு பெற்றவர் நடிகை ப்ரியாமணி. ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு எல்லோரும் பாவாடை தாவணி கெட்டப்பையே தருவதாகவும், கிளாமர் உடைகளில் ஆட விருப்பமாக இருப்பதாகவும் கூறி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ப்ரியாமணி.
ஆனால் பருத்திவீரன் ரேஞ்சுக்கு அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அதில் கிடைத்ததோ துக்கடா வேடம்.
இந்த நிலையில் அவர் நடித்து தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த ரத்தசரித்திரம் படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிவிட்டது.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர் இப்படிக் கூறுகிறார், "ஆந்திராவில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவம்தான் அந்த படத்தின் கதை. அதனால் இப்படம் ஆந்திராவில் சுமாராகப் போனது. ஆனால் தமிழில் ஓடவில்லை. நான் நடித்த பருத்திவீரன் படத்தை பார்த்துதான் இப்படத்திற்காக ராம்கோபால் வர்மா என்னை தேர்வு செய்தார். எனக்கு கொடுத்த வேடத்தில் நான் நூறு சதவீத உழைப்பை கொடுத்தேன். நானே டப்பிங்கும் பேசினேன். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது பெரிய வருத்தம் தந்துள்ளது. இந்த மாதிரி படங்களை ஒப்புக் கொள்வது தவறுதான். இனி ரத்த சரித்திரம் போன்ற சின்ன வேடங்களில் நடிக்க மாட்டேன். நல்ல கதையும், பாத்திரமும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்", என்று கூறியுள்ளார்.

24 டிசம்பர் 2010

போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய்!

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் சூட்கேஸ் விமான நிலையத்தில் மாயமானது. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவிப்புக்குள்ளானார் ஐஸ். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவசரம் அவசரமாக டிரஸ்ஸை தயார் செய்து கொடுத்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்றினர். அவசர டிரஸ்ஸாக இருந்தாலும் அதிலும் அசத்தலாக தோன்றி அனைவரையும் அசத்தி விட்டார் ஐஸ்வர்யா.
சென்னையில் நடந்த ஒரு புரமோஷனல் நிகழ்ச்சிக்காக டெல்லியிலிருந்து வந்தார் ஐஸ்வர்யா. நிகழ்ச்சியில் போட்டுக் கொள்வதற்கான விசேஷ உடையுடன் சென்னை வந்து இறங்கிய ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி. அவரது டிரஸ் இருந்த சூட்கேஸைக் காணவில்லை. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஐஸ்வர்யாவுக்கு டென்ஷனாகி விட்டது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்ட ஐஸ்வர்யா, நிலைமையை விளக்கி, நான் டிராக் சூட்டிலேயே நிகழ்ச்சிக்கு வந்து விடட்டா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகி விட்டது. கொஞ்சம் பொறுமையா இருங்க என்று ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்திய அவர்கள் அவசரம் அவசரமாக ஒரு புதிய டிசைனர் டிரஸ்ஸையும், அதற்கேற்ற ஷூவையும் தயார் செய்து ஐஸ்வர்யாவிடம் வழங்கி நிலைமையை சமாளித்தனர்.
ஐஸ்வர்யாவின் சூட்கேஸ் காணாமல் போனது தங்களது தவறுதான் என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் ஒத்துக் கொண்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அவரது பேக்கை கண்டுபிடித்துக் கொடுத்தனர் விமான நிறுவனத்தினர்.
சும்மா சொல்லக் கூடாது, நிலவை எத்தனை மேகம் வந்து மறைத்தாலும், நிலவின் பொலிவு அப்படியேதான் இருக்கும் என்பதைப் போல அவசரம் அவசரமாக கிடைத்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வந்தாலும், படு அட்டகாசமான அழகுடன் காட்சி அளித்தார் ஐஸ்வர்யா.
இருக்காதா பின்னே, உலக அழகின்னா சும்மாவா...!

15 டிசம்பர் 2010

திருநங்கை கல்கி திரைப்பட நாயகியாக புது அவதாரம் எடுத்துள்ளார்.

சகோதரி என்ற பவுண்டேஷனை நடத்தி வருபவர் திருநங்கை கல்கி. எம்.ஏ படித்தவரான இவர் திருநங்கைகளுக்கான திருமண இணையதளத்தையும் நடத்தி வருபவர். தமிழகத்தின் பிரபலமான திருநங்கைளில் இவரும் ஒருவர். திருநங்கைகள் நலனுக்காக பாடுபட்டு வருபவர்.
இந்த நிலையில் தற்போது கல்கி திரைப்பட நாயகியாகியுள்ளார். நர்த்தகி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் கல்கி. திருநங்கைகள் குறித்த படம் இது. திருநங்கைகளை நல்ல வெளிச்சத்தில் காட்டும் கதை என்பதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறுகிறார் கல்கவி.
புன்னகைப் பூ கீதா இப்படத்தை தயாரிக்கிறார். விஜயபத்மா இயக்குகிறார். திருநங்கைகளின் வாழ்க்கையை அழகுற சித்திரித்த முதல் படம் என்ற பெருமை இப்படத்திற்குக் கிடைக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.

12 டிசம்பர் 2010

சிம்புவுக்காக துடிக்கும் ஷம்மு!

சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஷம்மு துடியாத் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.
சிம்புவுக்கு திரையுயலகில் நிறைய நண்பர்கள். அவர்களில் ஆண்களைப் போலவே பெண்களும் நிறையவே உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷம்மு.
மலையாளத்து ஷம்மு, காஞ்சிவரம் படம் மூலம் நடிகையாக வந்தவர். தொடர்ந்து சில படங்களில் நடித்த ஷம்மு இப்போது தமிழில் லைம் லைட்டில் இல்லை.
தமிழில் நிறையப் படங்கள் இல்லாதது குறித்து ஷம்முவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நல்ல கதைகளாக வரும் படங்களை மட்டுமே ஏற்று நடிக்க காத்திருக்கிறேன். கதைக்குத் தேவையான கவர்ச்சிக்கும் நான் தயார்தான். ஆனால் கவர்ச்சிக்காக கதையில் காட்சிகளைத் திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.
நல்ல கதைக்காக காத்திருக்கும் ஷம்மு, சிம்புவுடனும் நடிக்க துடிப்புடன் இருக்கிறாராம்.
இவர் சிம்புவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர். ஆனால் இதுவரை தனக்கு சிம்பு ஒரு படத்தில் கூட வாய்ப்பு தரவில்லையே என்று ஏக்கப்படுகிறார் ஷம்மு. சிம்புவுக்கு நான் நெருங்கிய தோழிதான். ஆனால் இதுவரை அவர் என்னை ஒரு படத்தில் கூட நடிக்க கூப்பிடவில்லை. அவர் எப்போது கூப்பிட்டாலும் உடனே கால்ஷீட் தர தயாராகவே இருக்கிறேன். பிற படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சரி, சிம்பு கேட்டால் எத்தனை நாள் வேண்டுமானாலும் கால்ஷீட் தரத் தயாராம் ஷம்மு.
ஷம்முவுக்கேற்ற ஜம்மென்ற கதை ரெடியானால் கூப்பிடலாம் என்று சிம்பு இருக்கிறாரோ என்னவோ!

09 டிசம்பர் 2010

கமல்,த்ரிஷா இருவரையும் கைதுசெய்ய வேண்டும்.

நடிகர் கமல்-த்ரிஷா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மன்மதன் அம்பு. இப்படத்தில் கமல் எழுதியுள்ள பாடல் ஒன்று பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கோவை இந்து மக்கள் கட்சியின் பிரச்சார அணி செயலாளர் கிருஷ்ண கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தனர்.
அப்புகார் மனுவில், ’’மன்மதன் அம்பு படத்தின் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த படத்தில் கமலஹாசன் எழுதியுள்ள “கண்ணோடு” எனத் தொடங்கும் பாடல் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் உள்ளது. மேலும் இந்து சமய உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் வேதமான பிரபந்தம் குறித்து அவதுறு பரப்பும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் பெண்கள் கடை பிடிக்கும் வரலட்சுமி நோன்பை அசிங்கப் படுத்தும் வகையிலும், வக்கிரமான பாலுணர்வை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்து சமய கடவுளான அரங்கநாதர் குறித்தும் அவதூறு செய்யப்பட்டுள்ளது. இது ரெங்கநாதரின் பக்தரான எனக்கும், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் பெண்கள் இந்த பாடல் மற்றும் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த பாடலை எழுதிய கமலஹாசன் மீது மத உணர்வை புண்படுத்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வக்கிரமான பாலுணர்வுகளை தூண்டுதல் ஆகிய குற்றங்களை செய்ததற்காக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளனர்.

07 டிசம்பர் 2010

நமீதா ஏன் இப்படி ஆனார்!

விழாக்கள், வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு எக்குத் தப்பான ட்ரஸ்ஸில் வந்து எல்லோரது இதயத் துடிப்பையும் எகிற வைப்பது நமீதாவின் வழக்கம்.
நேற்று நடந்த இளைஞன் பட விழாவுக்கு வந்திருந்த நமீதா ஜாக்கெட் என்ற பெயரில் வெறும் பிரா மட்டுமே அணிந்து வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். முன்பக்கம் முழுசாக மூடிக் கொண்டிருந்த நமீதா, முதுகுப் பக்கத்தை கிட்டத்தட்ட முழுசாகவே திறந்து வைத்து 70 எம்எம் ஷோ காட்டினார்.
இதில் அனைவரையும் கவர்ந்த விசயம், நமீதாவின் பின்கழுத்திலிருந்து முதுகு வரை நீண்டிருந்த டாட்டூ. இந்த கறுப்பு நிற டாட்டூவை அவர் பெங்களூரில் குத்திக் கொண்டாராம். பார்க்க செம கவர்ச்சியாக இருக்கிறது என பலரும் கூறியதால், இப்போது வேறு சில கவர்ச்சிப் பிரதேசங்களிலும் குத்திக் கொள்ளப் போகிறாராம் டாட்டூவை.. அதாவது முன் கழுத்து, தோள் பட்டையில்!!
த்ரிஷா ஏற்கெனவே கழுத்துக்குக் கீழே டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். இப்போது நமீதா பேக் சைடில் குத்தியுள்ளார்.

05 டிசம்பர் 2010

கை நிறையப் படங்களுடன் லட்சுமி ராய்!

முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் கூட கை நிறையப் படங்களுடன் பிசியாக காணப்படும் லட்சுமி ராய் திரையுலகினருக்கு பெரும் அதிசயமாக தோன்றுகிறார்.
லட்சுமி ராய் இதுவரை ஒரு ஸ்டார் என்ற அந்தஸ்தையே எட்டவில்லை. ஆனாலும் படு பிசியாக காணப்படுகிறார். தொடர்ந்து செய்திகளில் அடிபட்டவண்ணமிருக்கிறார்.
தமிழில் தற்போது அஜீத்துடன் மங்காத்தா, ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து வரும் லட்சுமி ராய்க்கு மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கிறதாம்.
தற்போது மங்காத்தா படத்திற்காக பாங்காக்கில் முகாமிட்டுள்ளார் லட்சுமி ராய். அதை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் மலையாளப் படங்களில் நடிக்கப் போகிறார்.
மலையாளத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ், கேஸனோவா, யோதா 2 ஆகிய படங்களில் நடித்துத வருகிறார் லட்சுமி ராய்.
மங்காத்தா தவிர தமிழில் லட்சுமி ராய் நடித்து வரும் இன்னொரு படம் காஞ்சனா. முனி படத்தின் 2வது பாகமாக இது உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் அந்தஸ்து இல்லை, முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாகவும் இல்லை. ஆனாலும் படு பிசியான நடிகையாக லட்சுமி ராய் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

01 டிசம்பர் 2010

நான் யாரையும் காதலிக்கவில்லை,-சரண்யா.

"நான் யாரையும் காதலிக்கவில்லை; தாயார் துன்புறுத்துகிறார்; அவருக்கு அறிவுரை கூறுங்கள், என்று மாயமானதாக கூறப்பட்ட நடிகை சரண்யா போலீசில் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகள் சரண்யா(22). சினிமா நடிகை. "காதல், பேராண்மை படத்தில் நடித்துள்ள இவர், "மழைக்காலம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த மஞ்சுளா, தன் மகள் சரண்யாவை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரை அடுத்து, விசாரணை நடந்து வந்த நிலையில், தி.நகர் போலீஸ் நிலையம் வந்த நடிகை சரண்யா, உதவி கமிஷனர் மனோகரனை சந்தித்து தன் நிலை குறித்து விளக்கியுள்ளார்.
அப்போது சரண்யா, "என் தாயார் கூறியது போல் நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமா தொடர்பாக என் அம்மாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்ததால், வீட்டில் இருந்து வெளியேறி வெளியில் தங்கி நடித்து வருகிறேன். நான் சென்னையில் தான் இருக்கிறேன். என் தாயார் என்னை துன்புறுத்துகிறார். நான் எல்லாவற்றையும், அவரிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; அவருக்கு அறிவுரை கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

29 நவம்பர் 2010

அடித்தாரா நயன்தாரா?

ஹன்சிகாவை பிரபு தேவா காதலிப்பதாகவும், இருவரும் ஹோட்டலில் ஒன்றாக இருந்ததை கையும் களவுமாகப் பிடித்த நயன்தாரா, பிரபு தேவாவின் சட்டையைப் பிடித்து சண்டை போட்டார் என்றும் செய்திகள் வந்தன.
நயன்தாரா வந்ததும் அங்கிருந்து நைசாக நழுவப் பார்த்த ஹன்சிகாவை அடித்தார் நயன்தாரா என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த விவகாரம் குறித்து ஹன்சிகா இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு இப்போதுதான் 19 வயசாகுது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர்.
பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்ற அளவில் அவரை நேசிக்கிறேன். எனக்கு அண்ணன் மாதிரின்னு கூட சொல்லலாம்.
நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவில்லை" என்றார்.
என்னமோ போங்க... இதுக்கெல்லாம் 'ஐ விட்னஸா' தேடிக்கிட்டிருக்க முடியும்!

28 நவம்பர் 2010

தமிழுக்கு வரும் மதுரிமா.

தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிகரமான நாயகிகளில் முக்கியமானவரான மதுரிமா இப்போது தமிழுக்கும் வருகிறார்.
மலையாளத்து ஷாஜி கைலாஷ் இயக்க, ஆர்.கே. நாயகனாக நடிக்கும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தின் நாயகியாக நடிக்கிறார் மதுரிமா.
இந்தியில் பெரும் வெற்றிப் படமாக, பரபரப்பாகப் பேசப்பட்ட 'அப்தக்சப்பன்' படத்தின் மூலக் கதையைத் தழுவி உருவாக்கப்படும் படம் இந்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இப்படத்தின் டைட்டிலை கமல்ஹாசனிடமிருந்து பிரத்யேக அனுமதி பெற்று வாங்கியுள்ளனராம்.
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஆர்.கே. அவருக்கு ஜோடி போடுகிறார் மதுரிமா. தெலுங்கைப் போல தமிழிலும் கவர்ச்சித் தென்றலை அவர் தவழ விட வருவதால் இங்கு ஏற்கனவே உள்ள ஹீரோயின்கள் வட்டாரத்தில் சற்றே நடுக்கம் ஏற்பட்டுள்ளதாம்.
இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து அடுத்தடுத்து தமிழிலும் தடபுடலாக நடிக்க தயாராகி வருகிறாராம் மதுரிமா.

26 நவம்பர் 2010

கிள்ளாதீங்கண்ணே என்று கண்டித்த சினேகா!

கோழிப் பண்ணையைப் பார்வையிட வந்த போது, தனது இடுப்பை தொடர்ந்து கிள்ளியபடியும், இடித்தபடியும் இருந்த இளைஞரை, சற்றுகோபத்துடன், தயவு செய்து இப்படி செய்யாதீங்கண்ணே என்று கூறி கண்டித்தார் நடிகை சினேகா. இதையடுத்து அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
நடிப்பு தவிர விளம்பரப் படங்கள், கடை திறப்பு உள்ளிட்டவற்றிலும் பிசியாக இருக்கிறார் சினேகா. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஹோட்டல் திறப்பு விழாவில் சினேகா கலந்து கொண்டார்.
அழகான சேலையில், கழுத்து நிறைய நகையைப் பூட்டிக் கொள்ளாமல் சிம்பிளாக அதே சமயம் படு க்யூட்டாக வந்த சினேகாவைப் பார்க்க கூட்டம் கூடி விட்டது.
ஹோட்டல் திறப்பை முடித்த பின்னர் அதன் உரிமையாளர் வைத்துள்ள ஈமு கோழிப் பண்ணையைப் பார்க்கச் சென்றார் சினேகா. இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. கூடியிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் சினேகாவை மனம் போனபடி படம் பிடித்தனர்.
பெண்கள் சிலர் தங்களுக்கு போஸ் தருமாறு கூறவே சினேகாவும் புன்னகைத்தபடி நின்றார். இதையடுத்து தங்களது செல்போன்களில் சினேகாவை படம் எடுத்தனர் அப்பெண்கள்.
அப்போது சினேகாவை நெருக்கியபடி நின்ற ஒரு நபர் அவரது இடுப்பைக் கிள்ளியுள்ளார். இதைப் பார்த்து கோபமடைந்த சினேகா, அவரிடம் திரும்பி, அப்போதிருந்தே இடித்துக் கொண்டே இருக்கறீங்கண்ணே, நல்லா இல்லே. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க என்று கண்டித்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த நபரை கடுமையாக எச்சரித்து, திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

24 நவம்பர் 2010

காவலன் படத்தை திரையிட உயர்நீதிமன்றம் தடை!

நடிகர் விஜய் நடித்துள்ள காவலன் படத்தை 6 வார காலத்திற்கு வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த சந்திரா இன்கார்பரேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில்,
நடிகர் விஜய்- அசின் நடித்த காவலன் படத்தை ஏகவனூர் கிரியேஷன்ஸ் பட நிறுவன உரிமையாளர் ரொமேஷ்பாபு தயாரித்துள்ளார். டைரக்டர் சித்திக் இயக்கி உள்ளார். வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.
படத்தை அடுத்த மாதம் 17-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ரொமேஷ்பாபுவிடம் இருந்து ரூ.5.50 கோடிக்கு வாங்கினேன். இதற்கான ஒப்பந்தம் 29-9-2010 அன்று போடப்பட்டது. இதுவரை நான் ரூ. ஒன்றரை கோடியை முன்பணமாக கொடுத்துள்ளேன்.
இந்நிலையில் காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமையை உரிமையாளர் ரொமேஷ்பாபு சினிமா பாரடைஸ் நிறுவன உரிமையாளர் சக்தி சிதம்பரத்துக்கு விற்றுள்ளார்.
இதுபற்றி நான் சக்திசிதம்பரம் மற்றும் இப்படத்தை பிரின்ட் செய்யும் கலர் லேப்புக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். மேலும் தயாரிப்பாளரிடம், கலர் லேப்பிடம் இருந்து வெளிநாட்டு உரிமை எனக்கு வழங்கியதற்கான கடிதம் வாங்கி தரும்படி வலியுறுத்தினேன்.
அதற்கு அவர் இனி என்னிடம் கலர் லேப் கடிதம் கேட்டால் வெளிநாட்டு உரிமைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
நான் தயாரிப்பாளரிடம் மீதி தொகையை கொடுக்கும் போது கலர்லேப் என்னிடம் காவலன் பட பிரின்டை ஒப்படைக்க வேண்டும். வேறு யாருக்கும் பிரின்ட் கொடுக்க கூடாது என தடை விதிக்க வேண்டும். வெளிநாட்டு உரிமையை வேறு யாருக்கும் கொடுப்பதற்கும், படத்தை வெளியிடவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை இன்று விசாரித்த நீதிபதி ராஜேஷ்வர், படத்தை 6 வாரத்திற்கு வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், விளக்கம் அளிக்கும்படி தயாரிப்பாளர் ரொமேஷ் பாபு, விநியோகஸ்தர் சக்திசிதம்பரம், கலர் லேப் நிர்வாகி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

21 நவம்பர் 2010

சீதையாக நயனதாரா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா போராட்டம்!

தெலுங்குப் படத்தில் சீதை வேடத்தில் நடிகை நயனதாரா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று சிவசேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. ராமாயண கதையை இதில் படமாக்குகின்றனர். இதில் ராமர் வேடத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரபுதேவாவுடன் கள்ளக் காதல் கொண்டு, பிரபுதேவா குடும்பத்தில் புயலைக் கிளப்பி வரும் நயனதாரா, சீதை வேடத்தில் நடிப்பதா என்று அங்கு ஆட்சேபனை கிளம்பியது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், சீதை வேடத்தில் நயனதாராவே நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இதற்கு இந்து அமைப்புகள் ரூபத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சி தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சிவசேனா சார்பில் இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரன் நினைவுப் பூங்கா முன்பு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதை ஏற்க முடியாது. இது இந்துக்களை இழிவுபடுத்தும் செயல். எனவே இதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறோம். நயனதாரா இந்த வேடத்தில் நடிப்பது உறுதியானால் அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.