ரசிகர்கள் பார்க்க தயாராக இருந்தால் நான் நீச்சல் உடையணிந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார். புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, சமீப காலமாக தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நீச்சல் உடை, முத்தக்காட்சி, நெருக்கமான டூயட் பாடல்களில் நடிக்காத சினேகாவின் மனதில் இப்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன். குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது. நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார். சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.



சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை சுவாதி, அந்தபடத்திற்கு பிறகு தமிழில் காணாமல் போனார். தற்பொழுது தெலுங்கில் முகாமிட்டு இருக்கும் அம்மணி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டும் இல்லாமல் இப்போது பாடகியாகவும் மாறி இருக்கிறார். தெலுங்கில் நாகசைதன்யா-தமன்னா ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் 100% லவ் என்ற படத்தில், ஏ ஸ்குயர், பி ஸ்குயர் என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் சுவாதி. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் பாடியது குறித்து சுவாதி கூறியதாவது, படத்தில் நான் பாடியதற்கு முக்கிய காரணமே தேவி ஸ்ரீபிரசாத் சார் தான். என்னுடைய குரல் நன்றாக இருக்கிறது என்று கூறி அவர் தான் கட்டாயப்படுத்தி பாட வைத்தார். தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வந்தால் பாடுவேன் என்றார்.



















