பக்கங்கள்

25 மார்ச் 2011

ராணாவில் நடிக்க நடிகைகள் மறுப்பு.

ரஜினியின் ராணா படத்தில் நடந்துவரும் மாற்றங்களைப் பார்த்தால் யாருக்கும் ஆச்சரியம் வரும். ரஜினி படத்தில் நடித்தாலே போதும் என்றுதான் பெரும்பாலான நடிகைகள் நினைக்கிறார்கள். ஆனால் ராணாவில் நடந்து வருவதோ இதற்கு நேர் எதிர்.
முதலில் மாதுரி தீட்சித் ராணாவில் ரஜினி ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார். மனம் தளராமல் ரேகாவை ஒப்பந்தம் செய்தனர். அவரும் இப்போது நோ சொல்லியிருக்கிறார். சும்மா வீட்டில் இருக்கும் அவரை நடிக்க அழைத்தால் நாலு விரலை காட்டுகிறாராம். அதாவது ராணாவில் நடிக்க நான்கு கோடி வேண்டுமாம். படத்தை தயாரிக்கும் ஆக்கர் ஸ்டுடியோவை பொறுத்தவரை நாற்பது லட்சமே அதிகம். முடியாது என்று சொல்ல, அப்போ நானும் நடிக்க முடியாது என தூசி தட்டி கிளம்பிவிட்டார் ரேகா.
மாதுரி, ரேகா வரிசையில் இருக்கும் மற்றொரு அம்மா நடிகை ஹேமமாலினி. இவரைதான் அடுத்து அப்ரோச் செய்திருக்கிறார்கள்.
இதனிடையில் படத்தின் ஸ்கிரிப்டை கேட்டிருக்கிறார் வித்யா பாலன். கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஏது ஸ்கிரிப்ட்? முழுசா முடிச்சப்புறம் தர்றோம் என்றிருக்கிறார்கள். இதனால் வித்யா பாலன் நடிப்பதும் கேள்விக்குறிதான் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக