பக்கங்கள்

04 மார்ச் 2011

நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்!

நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிருது, ஆனால் நல்ல வலுவான கேரக்டர் ஏதும் அமையாததால் வரும் படங்கள் அனைத்தையும் புறக்கணிக்கிறேன் என்கிறார் நடிகை பத்ம ப்ரியா.
பட்டியல், மிருகம், பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பத்மப்ரியா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென் இந்தியா சினிமாவை ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். ஆனால் எந்த மொழியிலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆரம்பத்தில் ஹோம்லி பெண்ணாக வந்த பத்மப்ரியா, பின்னர் கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நாயகியாக ஜொலிக்க முடியவில்லை. தற்போது தமிழில் எந்த படவாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் ஒரு நல்ல வலுவான கேரக்டருக்காக காத்திருப்பதாக கூறுகிறார் பத்மப்ரியா.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழில் நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நான் தான் அவற்றை தவிர்த்து வருகிறேன். இதற்கு காரணம் நல்ல வலுவான கேரக்டர் அமையாதது தான். நல்ல வலுவான கேரக்டர் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக