பக்கங்கள்

23 மே 2010

ஒன்பதாம் வகுப்பு மாணவி பொலிசாரால் மீட்பு!

பெரம்பூர் திரு.வி.க. நகரில் ஒரு கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி கடத்தி வந்து அறையில் அடைத்து ஆபாச படம் எடுப்பதாக போலீசுக்கு புகார் வந்தது. இதற்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து செம்பியம் இன்ஸ்பெக்டர் ரவிகுமரன் திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது போலீசைப் பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த இளம் பெண்ணை போலீசார் மீட்டனர். அவரை வைத்து ஆபாச படம் எடுத்த ஆட்டோ டிரைவர் முரளி என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் இந்த கும்பல் இதுபோல் பல பெண்களை ஆபாச படம் எடுத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. மீட்கப்பட்ட இளம்பெண் 9-ம் வகுப்பு மாணவி ஆவார். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக