பக்கங்கள்

09 மே 2010

நான் சிவனாகிறேன்!


தவறு செய்பவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனைகள் தப்பு கணக்குகளில் சேராது. தவறு செய்பவர்களை தண்டிப்பவர்கள் எல்லோரும் சாமிதான் என்ற கருவை அடிப்படையாக வைத்து, ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, `நான் சிவனாகிறேன்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

படத்தின் கதாநாயகன் தன்னை சிவனாக எண்ணிக்கொண்டு தவறு செய்பவர்களை தண்டிப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதா நாயகனாக உதய் கார்த்திக் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆதித்யா, பிரேம்குமார், சுகுமார், `காதல்' கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், வி.கே.ஞானசேகர். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.மனோஜ் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், கே.நிஷாந்த், வி.கே.ஞானசேகர் ஆகிய மூவரும் பாடல்களை எழுதுகிறார்கள். எம்.என்.கிரியேஷன்ஸ் சார்பில் சி.கே.தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக