பக்கங்கள்

21 மே 2010

எஸ்.ஜே.சூர்யாவிற்கு செம சாத்து,வாயால் வந்தது வினை!



பவன்கல்யாண்! சிரஞ்சீவியின் தம்பி. ஆந்திராவின் சூப்பர் ஸ்டார். பிராஜா ராஜ்ஜியம் கட்சியின் மிக முக்கிய பொறுப்பிலிருப்பவர்.
அப்படிப்பட்ட புலி, குஷி இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை பளாரென்று அறைந்ததோடல்லாமல் பலமாக தாக்கியும் இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தலக்கோணத்தில் நடந்த படப்பிடிப்பில்தான் இந்த பலமான தாக்குதல். இதையடுத்து படப்பிடிப்பு நின்று போக, பதைபதைப்பிலிருக்கிறது புலி பட யூனிட்.
குஷி படத்தை தெலுங்கிலும் இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அதில் நடித்தவர்தான் பவன்கல்யாண். அதற்கு முன்புவரை ஃபிளாப் ஹீரோ லிஸ்ட்டில் இருந்த பவன், இந்த படத்திற்கு பிறகுதான் டாப் லெவல் ஹீரோவானார். ஆனால் அப்போதே சூர்யாவின் செய்கைகள் பவனுக்கு பிடிக்காமல்தான் இருந்ததாம். படத்தின் ஹீரோயின் பூமிகா, சூர்யாவுடன் நெருக்கமாக இருந்ததும், படம் ரிலீஸ் நேரத்தில் தனக்கும் அவர் கட்அவுட் வைத்துக் கொண்டதும் பெரும் எரிச்சலை கிளப்பியது பவனுக்கு. இந்நிலையில் தமிழில் நடிகராகிவிட்ட சூர்யா, அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து உச்சாணிக் கொம்புக்கு வளர்ந்தார்.
ஆனால் வளர்ந்த வேகத்திலேயே சரியவும் செய்தார். ஆனால் மீண்டும் ஜெயிப்பேன். நான் எடுத்து வருகிற புலி படத்தை தமிழில் எடுக்கும்போது அதில் நான்தான் ஹீரோ என்றெல்லாம் உறுமினார் சூர்யா. இந்த பேட்டியை எந்த பாவியோ மொழி பெயர்த்து ஆந்திராவில் வெளியிட அங்கே கடித்தது அனகோண்டா. 35 கோடி வியாபார கெத் உள்ள தானும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒன்றா என்ற எரிச்சல் உறுத்திக் கொண்டே இருந்ததாம் பவனுக்கு. 25 கோடியில் இந்த படத்தை எடுத்து முடிப்பதாக சொன்ன டைரக்டர் 35 கோடியை எட்டியும் பிறகும் இன்னும் படத்தை முடிக்கவில்லை. அதற்கு காரணம் ராஜசேகர ரெட்டியின் மரணம், தெலுங்கானா பிரச்சனை இன்னும் பல பல.
இந்த நிலையில் படப்பிடிப்பில் எந்நேரமும் மற்றவர்களிடம் எரிந்து விழுவதும், மறைமுகமாக பவனை நக்கல் அடிப்பதுமாக இருந்தாராம் சூர்யா. எல்லாவற்றுக்குமாக சேர்த்து பல்லை கடித்துக் கொண்டிருந்த பவன், போன வாரம் சூடாகிவிட்டார். பவன் தங்கியிருந்த கேரவேன் அருகில் நின்று கொண்டு எதற்கோ கூச்சலிட்டாராம் சூர்யா. அப்படியே கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிய பவன், அந்த இடத்திலேயே இவரை போட்டுதாக்க, கீழே மயங்கி விழுந்துவிட்டாராம் சூர்யா. அந்த பவன் பிளாக் பெல்ட் ஆசாமியும் கூட.
மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்களாம் சூர்யாவுக்கு. இதையடுத்து படப்பிடிப்பு நகராமல் நிற்கிறது. இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்தால் படமே முடிந்திருக்கும். இந்த நேரத்தில் இப்படி ஒரு கெரகமா? ஆடிப்போயிருக்கிறார் தயாரிப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக