பக்கங்கள்

05 மே 2010

பட்டதாரி பெண்ணுக்கு நடந்தது என்ன?

சென்னையில் கொம்புயுட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்த பட்டதாரி பெண் மயக்க ஊசி போட்டு மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பட்டதாரி இளம்பெண், `தனக்கு அதுபோல் எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதுடன் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மறுத்தும் ஆஸ்பத்திரியில் போராட்டம் நடத்தி வருகிறார்'. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவிலை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பெயர் ராணி. இவர்களது மூத்தமகள் ஸ்ரீகுமாரி (24 வயதான இவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.எஸ்சி. கம்ப்ïட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்துள்ள இவர், சென்னை தரமணி டைட்டல் பார்க்கில் உள்ள கம்ப்ïட்டர் நிறுவனம் (கால்சென்டர்) ஒன்றில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தார். சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை ராஜேந்திரன் ஆம்னி பஸ் டிரைவராக உள்ளார். இவரது தங்கை கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஸ்ரீகுமாரி தான் வேலை பார்க்கும் நிறுவனம் தன்னை கனடா நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்பப் போவதாகவும், தான் உடனடியாக கனடா செல்ல இருப்பதாகவும் தனது பெற்றோரிடம் கூறினார். மகள் கனடா செல்கிறாள், அவளை வழியனுப்பி வைப்போம் என்று ஸ்ரீகுமாரியின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை அன்று சென்னை வந்தனர். ஸ்ரீகுமாரியும் கனடா செல்வது விஷயமாக தான் வேலைபார்க்கும் கம்பெனிக்கு போய் பார்த்துவிட்டு வருவதாக சனிக்கிழமை அன்று காலையில் சென்றார். போனவர் மாலை 5 மணி ஆகியும் திரும்பிவரவில்லை. பயந்துபோன அவரது தந்தை கம்ப்ïட்டர் நிறுவனத்திற்கு போய் தனது மகளை எங்கே என்று கேட்டார். அதற்கு அந்த கம்ப்ïட்டர் நிறுவனத்தினர் சரியாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீகுமாரியின் செல்போனில் தொடர்பு கொண்டபோதும் பேச முடியவில்லை. செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மகளுக்கு என்ன கதி ஆனதோ என்று ஸ்ரீகுமாரியின் பெற்றோர்கள் பயந்தனர். இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் ஸ்ரீகுமாரியோடு செல்போனில் பேச முடிந்தது. அப்போது அவர், தியாகராயநகர் சி.ஐ.டி. காலனியில் ஒரு வங்கி ஏ.டி.எம். மையம் அருகே அரைகுறை மயக்கத்தில் இருப்பதாகவும், உடனடியாக வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என்றும் ஸ்ரீகுமாரி கூறினார். உடனே ஸ்ரீகுமாரியின் பெற்றோர் சி.ஐ.டி. காலனி சென்றனர். அங்கு வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் அருகே ஸ்ரீகுமாரி உட்கார்ந்திருந்தார். அவரை சுற்றி பொதுமக்கள் சிலரும் நின்றிருந்தனர். ஸ்ரீகுமாரி மயக்கம் அடைந்து ரோட்டு ஓரம் கிடந்ததாகவும், முகத்தில் தண்ணீர் தெளித்து உட்கார வைத்துள்ளோம் என்றும் பொதுமக்கள் கூறினார்கள். தான் வேலைபார்த்த கம்ப்ïட்டர் நிறுவனத்துக்கு சென்ற ஸ்ரீகுமாரிக்கு என்ன நடந்தது, அவர் ஏன் மயக்கமடைந்த நிலையில் ரோட்டு ஓரம் கிடந்தார் என்பது போன்ற திகிலான கேள்விகள் ஸ்ரீகுமாரியின் பெற்றோர் மனதில் எழுந்தது. இதுபற்றி ஸ்ரீகுமாரியிடம் கேட்டபோது, `அவர் விவரமாக எதுவும் சொல்லாமல், எனக்கு உடல் முழுவதும் வலிக்கிறது. ஏதாவது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேருங்கள்' என்று மட்டும் தெரிவித்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்ரீகுமாரியை சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த நிலையில், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஸ்ரீகுமாரியின் தந்தை வேளச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், கிண்டி உதவி கமிஷனர் செந்தில்குமரன், வேளச்சேரி இன்ஸ்பெக்டர் தென்னரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தான் வேலைபார்த்த கம்ப்ïட்டர் நிறுவனத்துக்கு சென்ற ஸ்ரீகுமாரியை யாரோ மர்ம நபர்கள் கடத்தி சென்று கற்பழித்திருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது. இதுபற்றி ஸ்ரீகுமாரியிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தபோது, அவர் ஒரு திடுக்கிடும் தகவலை சொன்னார். அவர் கூறியதாவது:- எங்கள் கம்பெனியில் வேலைபார்க்கும் 4 திறமையான ஊழியர்களை கனடா நாட்டுக்கு விசேஷ பயிற்சிக்கு அனுப்புவதற்கு கம்பெனி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு ஒரு தேர்வு நடத்த வேண்டும் என்று என்னை கம்பெனி அதிகாரிகள் 2 ஆண்களும், 2 பெண்களும் 4 பேர் காரில் அழைத்து சென்றனர். போகும் வழியில் என்னிடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து போடும்படி கூறினார்கள். நான் கையெழுத்து போட மறுத்தேன். இதனால் என்னுடன் வந்த பெண் அதிகாரி ஒருவர் எனக்கு மயக்க ஊசி போட்டுவிட்டார். உடனே நான் மயங்கி விட்டேன். அதன்பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. தியாகராயநகரில் ரோட்டு ஓரம் என்னை தூக்கி போட்டுவிட்டனர். பொதுமக்கள் எனது முகத்தில் தண்ணீர் தெளித்த பிறகுதான் எனக்கு மயக்கம் தெளிந்தது. இவ்வாறு ஸ்ரீகுமாரி போலீசாரிடம் கூறினார். ஸ்ரீகுமாரி இருந்த நிலையை பார்த்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் முதலில் கருதினார்கள். இதனால் அவரை நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஸ்ரீகுமாரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்கள் முற்பட்டனர். ஆனால் மருத்துவ பரிசோதனைக்கு ஸ்ரீகுமாரி கடுமையாக மறுத்துவிட்டார். டாக்டர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும், நான் கற்பழிக்கப்படவில்லை என்றும், எனக்கு மருத்துவ பரிசோதனை அவசியமில்லை என்றும் ஸ்ரீகுமாரி கோபமாக கூறி வருகிறார். ஆனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகளும், ஸ்ரீகுமாரியை சமாதானப்படுத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக நேற்று இரவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இந்த வழக்கை பொறுத்தமட்டில், இளம் பெண் ஸ்ரீகுமாரியும், அவரது பெற்றோரும் முரணான தகவல்களை சொல்லுகிறார்கள். ஸ்ரீகுமாரி தரமணி டைட்டல் பார்க்கில் கால் சென்டரில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்ப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் அந்த குறிப்பிட்ட கம்பெனியில் போய் விசாரித்தபோது, ஸ்ரீகுமாரி எங்கள் கம்பெனியில் வேலை பார்க்கவே இல்லை என்று கூறிவிட்டனர். எங்கள் கம்பெனியில் யாருக்கும் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் தரப்படவில்லை என்றும் சொல்லுகிறார்கள். ஸ்ரீகுமாரியிடம் பல மர்மங்கள் உள்ளன. அவர் போதை பொருளுக்கு அடிமையாகி தவறான நபர்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அந்த கும்பலின் ஏமாற்று வலையில் அவர் சிக்கியிருக்கலாம். அந்த கும்பல் சொன்ன தகவல் அடிப்படையில் கனடாவுக்கு செல்வதாக சொல்லி தனது பெற்றோரை வரவழைத்திருக்கலாம். இதற்கெல்லாம் ஸ்ரீகுமாரிதான் சரியான விடையைச் சொல்ல வேண்டும். அவர், பெற்றோரிடம் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலைபார்ப்பதாக சொல்லி கூட ஏமாற்றியிருக்கலாம். அவர் மயக்கமடைந்து தியாகராயநகரில் ரோட்டு ஓரம் கிடந்தது எப்படி? என்பதும் புரியாத புதிராக உள்ளது. அதற்கு அவர் சொல்லும் கதையும் நம்பும்படியாக இல்லை. விரைவில் இந்த வழக்கில் என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை கண்டுபிடித்து விடுவோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக