பக்கங்கள்

28 ஜூன் 2010

ராஜபக்ஷவின் அரவணைப்பில் அசின் இலங்கையில்.



இந்தியில் சல்மான்கான் நடிக்கும் 'ரெடி' படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. இப்படத்தில் சல்மான் ஜோடியாக அசின் நடிக்கிறார். எண்ணற்ற ஈழத்தமிழர்களின் மண்டையோடுகளின் மேல் பந்தலிட்டு இலங்கை படவிழாவை நடத்தினார் ராஜபக்சே. இவ்விழாவில் கலந்துகொண்ட இந்தி நட்சத்திரங்களுக்கு தென்னிந்திய திரையுலகம் ரெட் போட்டுள்ளது அவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஆதரவோ படத்தை வெளியிடவோ கூடாது என்று முடுவெடுத்துள்ளது. எவன் குடி எக்கேடு கெட்டா என்ன? நம்ம வேலை நல்லா நடக்கனும் என்ற 'பரந்த' எண்ணம் கொண்டவர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ள அசின் ராஜபக்சேவின் பாதுகாப்பு வளையத்தில் இலங்கையில் வட்டமடித்து வருகிறார். இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் விவேக் ஓபராய் ராஜபக்சேவின் ஒன்றுவிட்ட தம்பிபோல இலங்கையிலேயே தங்கி ராஜபக்சே இடும் கட்டளையை செவ்வனே செய்துவருகிறார். இதற்கிடையே சல்மான்கானும் ராஜபக்சே காட்டிய பணத்தாசையில் பைத்தியமாகிவிட்டாராம். இலங்கையில் படப்பிடிப்பை நடத்தினால் அரசாங்கமே எல்லா ஏற்பாடுகளையும் செய்வதுடன் கணிசமான தொகையும் தருவதாக கூறவே மொரிஷியஸில் நடக்கவிருந்த படப்பிடிப்பை இலங்கைக்கு மாற்றினார் சல்மான்கான். படப்பிடிப்பிற்காக கடந்த புதன் கிழமை இலங்கை சென்ற சல்மானுடன் அசினும் ஒட்டிக்கொண்டுள்ளார். அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அசினும் சல்மானும் பல ஆயிர உயிர்களின் பலிபீடமாகவுள்ள இலங்கை பூமியில் நெஞ்சில் எவ்வித நெருடலும் இன்றி ஜாலியாக சுற்றிவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக