பக்கங்கள்

03 ஜூன் 2010

ஹிந்தியில் கலக்கும் ஜெனிலியா.


தமிழில் "பாய்ஸ்' படத்தில் அறிமுகமாகி, விஜய்யுடன் "சச்சின்', "ஜெயம்' ரவியுடன் "சந்தோஷ் சுப்ரமணியம்' ஆகிய படங்களில் நடித்தவர் ஜெனீலியா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் இப்போது ஹிந்தியிலும் படு பிஸியாக நடித்து வருகிறார்.
""என்ன கேரக்டர் கொடுத்தாலும் அதில் என்னால் சிறப்பாக நடிக்க முடியும். முந்தைய படங்களில் இதை நிரூபித்துள்ளேன். "சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் நடித்த ஹாசினி வேடத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. பிற மொழிகளில் அந்த படத்தை ரீ-மேக் செய்தபோதுகூட என்னைத்தான் நடிக்க வைத்தார்கள்.
வேறு யாராலும் அந்த கேரக்டரில் அவ்வளவு கச்சிதமாக நடிக்க முடியாது என இயக்குனர்கள் கருதியதால் எனக்கு வாய்ப்பு வந்தது. நிஜத்தில் என் கேரக்டர் ஹாசினி மாதிரிதான்! எனவேதான் பெயர் வாங்க முடிந்தது என்று நினைக்கிறேன்.
நான் எனக்கு போட்டியாக யாரையும் நினைக்கவில்லை. எனக்கு நானேதான் போட்டி. ஹிந்தி திரையுலகிலும் எனக்கு பெயர், புகழ் நிறைய கிடைத்துவிட்டது. தென்னிந்தியாவில் இருந்து ஹிந்திக்கு போன ஸ்ரீதேவி, ஜெயப்ரதா இருவரும் அங்கு வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்களுக்கு பிறகு நான்தான் ஹிந்தியில் செல்வாக்கு உள்ள நடிகையாக இருக்கிறேன்.
ஸ்ரீதேவி, ஜெயப்ரதா இடத்தை இப்போது நான் பிடித்து விட்டேன். இதை ஆணவத்தோடுதான் சொல்கிறேன்.
நான் எல்லாப் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். கால்ஷீட் கொடுத்த பிறகு கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டியது நமது கடமை'' என்கிறார் ஜெனீலியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக