பக்கங்கள்

03 ஜூன் 2010

மொழிகள் மாறினாலும் உணர்வுகள் ஒன்றுதான்-ஸ்ரேயா.


தெலுங்கில் சிறிய இடைவெளிக்கு பிறகு "டான் சீனு' என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, மலையாளத்தில் "போக்கிரி ராஜா' என்ற படத்தில் மம்முட்டி, பிருத்திவிராஜுடன் நடித்துள்ளார். பல மொழிகளில் நடித்து வரும் ஸ்ரேயா அது பற்றி கூறுகையில்,
""வெவ்வேறு மொழி படங்களில் நடிப்பது எனக்கு பிரச்சினையாக இல்லை. மொழிகள் மாறினாலும் உணர்வுகள் ஒன்றுதான்! நடிக்கும்போது அந்தந்த மாநில பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்வேன்.
என்னிடம், ""திருமணம் எப்போது?'' என்று எல்லோரும் கேட்கிறார்கள். இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை. கல்யாணம் என்பது வாழ்க்கையில் முக்கிய கட்டம்தான். அதை நான் தவறவிடமாட்டேன். என் திருமணம் ரகசியமாக நடக்காது. நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரையும் அழைத்து, அவர்களோட வாழ்த்துக்களோடுதான் செய்து கொள்வேன். அதேபோல நான் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருப்பேன் என்றெல்லாம் சிந்திப்பது கிடையாது. ஐந்து நிமிடம் கிடைத்தாலும் அதை ஆக்கப்பூர்வமாக செலவிட விரும்புபவள் நான்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக