பக்கங்கள்

02 ஜூன் 2010

கணவனை மரத்தில் கட்டி அடித்த மனைவி!


குடிபோதையில் தினமும் அடித்து உதைத்த கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவி தர்ம அடி கொடுத்தார். ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர்கள் விவேக் (42), ரமா (40) தம்பதி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான விவேக் தினமும் மாலையில் வீட்டுக்கு வரும் போது முழுபோதையில் இருப்பாராம். ரமாவை அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளார். போதை தெளிந்ததும், இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்வது விவேக்கின் வழக்கம். ஆனால், இரவு ஆனதும் மீண்டும் போதையில் இறங்கிவிடுவார். கல்லானாலும் கணவன், புல் போதையில் இருந்தாலும் புருஷன் என்று இருந்த ரமா, நேற்று முன்தினம் திடீரென கொதித்தெழுந்தார். போதையில் தன்னை அடித்த விவேக்கை பதிலுக்கு ரமாவும் தாக்கத் தொடங்கினார். அவரை தரதரவென இழுத்துச் சென்று வீடு அருகே உள்ள மரத்தில் கட்டி வைத்தார். பின்னர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் இருந்து வந்து விவேக்கை சரமாரியாக தாக்கினார். கை வலித்தால், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் அடித்தார். பின்னர் போலீசிடம் விவேக் ஒப்படைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக