பக்கங்கள்

08 ஜூன் 2010

மகனே மருமகனே,ஆதரவற்ற நிலையில்.


நடிகர் விவேக் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள(வந்த) படம் ’மகனே மருமகனே’. இந்தப்படம் திரையிட்ட முதல் நாளிலேயே அரங்கம் நிறையவில்லையாம்.
வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப் படம் நான்கு காட்சிகளாகத் திரையிடப்பட்டது. படம் வெளியான நான்காவது நாள், தியேட்டரில் மேட்னி ஷோவுக்கு கூடியது வெறும் மூன்று பேர்தானாம்.
ஒரு ஷோவை ஓட்ட குறைந்தபட்சம் 7 பேராவது இருக்க வேண்டுமாம்.
மூன்று பேர் மட்டுமே வந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் எடுத்து வந்திருந்த மூன்று பேரிடமும் நிலைமையை விளக்கிச்சொல்லி டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அந்த காட்சியை ரத்து செய்திருக்கிறார்கள்.
அடுத்தடுத்த ஷோக்களுக்கு 10,15 பேர் வந்ததால் மறுநாளே அந்தப்படத்தை தூக்கிவிட்டார்கள். விசயத்தை நடிகர் விவேக்கிடமே சொல்லியிருக்கிறார்கள்.
அவர் அதிர்ந்து போகவில்லையாம். பல இடங்களில் இருந்து இப்படி ரிசல்ட் வந்ததாலோ என்னவோ தெரியவில்லை அவர் அதிராமால் இருந்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக