பக்கங்கள்

01 ஜூலை 2010

திருமணமான பெண் கள்ளக் காதலனுடன் தலைமறைவு.

திருவண்ணாமலை அருகே திருமணமான பெண்ணை கடத்தி சென்ற கள்ளக்காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த சேர்ப்பாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் கல்பனா (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 20ம் தேதி முதல் கல்பனா திடீரென மாயமானார். இது குறித்து வாணாபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில், கல்பனா வீட்டுக்கு அருகே வசித்து வரும் செந்தில் (22) என்பவருக்கும் கல்பனாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், கல்பனாவை செந்தில் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இவர்களுக்கு உடந்தையாக செந்திலின் தந்தை பச்சமுத்து, அவரது தாய் ரோஸ் ஆகியோர் இருந்துள்ளனனர். இது தொடர்பாக செந்தில், பச்சமுத்து, மற்றும் ரோஸ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக