பக்கங்கள்

30 மே 2012

நீ தமிழில் பாடக்கூடாது....!

Premgi Miffed With Singer Girish ஐபிஎல் இன்னும் என்னென்ன சண்டையை 'வலித்து'க் கொண்டு வருமோ... இந்த முறை இரு கோலிவுட் நட்சத்திரங்கள் மோதிக் கொண்டுள்ளனர். அவர்கள் பிரபல நடிகர் பிரேம்ஜி மற்றும் பாடகர் கிரிஷ். சென்னையை தோற்கடித்து கொல்கத்தா அணி கோப்பையை வென்றதையடுத்து, இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா வீட்டில் ஒரு பார்ட்டி நடந்தது. விடிய விடிய நடந்த இந்த மது விருந்தில் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாரூக்கான், அவர் மனைவி கவுரி, நடிகர் அக்ஷய் குமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ் சினிமா பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷும் இதில் கலந்து கொண்டு, விருந்துக்கு வந்தவர்களுடன் போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்ததும் கோபமடைந்த பிரேம்ஜி, "சென்னை அணியை தோற்கடித்த கொல்கத்தா அணி ஓனர்கூட விருந்தில் கலந்து கொண்டது சரியா... இனி நீ தமிழில் பாடக்கூடாது. போய் கொல்கத்தால பாடித்தான் பிழைக்கணும்," என ட்வீட் செய்தார். உடனே கிரிஷ், "டேய்... அது பிரபு தேவா கொடுத்த விருந்துடா... நான் அவர்கூட தான் போட்டோ எடுத்துக்கிட்டேன். அந்த விருந்துக்கு ஷாரூக் வந்திருந்தார் அவ்வளவுதான்," என பதில் கூறியிருந்தார். பிரேம்ஜியும் கிரிஷும் நண்பர்களும்கூட. எனவே இந்த ட்விட்டர் சண்டை பற்றிக் கேட்டதற்கு, "எங்களுக்குள் சண்டை எதுவும் இல்லை. பிரேம்ஜியின் கமெண்டை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்றார். பிரேம்ஜி கூறுகையில், "சும்மா வாய் சண்டைதான். ஐபிஎல் வேற முடிஞ்சிடுச்சா.. ஒரே போர்.. அதான் கிரிஷை கலாய்ச்சேன்," என்றார் தன் பாணியில்...

28 மே 2012

அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்... நமீதா உறுதி!

namitha kapoorஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்று ஒரு இயக்குநர் விடுத்த வேண்டுகோளை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் நமீதா. நடிப்புக்காக கூட அதை நான் விரும்பவில்லை, ஆதரிக்க விரும்பவில்லை என்று ஒரே போடாக போட்டு விட்டாராம் நமீதா. கவர்ச்சிக்குப் பெயர் போனவர் நமீதா. ஆனால் இப்போதெல்லாம் தனது கவர்ச்சியில் ஆபாசமோ, அசிங்கமோ இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் சற்று கவனமாகவே இருக்கிறார். நடிப்பதிலும் கூட சில பாலிசிகளை வைத்துக் கொண்டு தேர்வு செய்து வேடங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். முன்பு போல படங்கள் அவர் கையில் இல்லாவிட்டாலும் கூட நிறைந்த மனதுடன்தான் இருக்கிறாராம். சமீபத்தில் அவரிடம் ஒரு இயக்குநர் கதை சொல்லியுள்ளார். படத்தின் ஒரு வரிக் கதையைக் கேட்ட அவர் இம்ப்ரஸ் ஆகி, பரவாயில்லையே, நல்லாருக்கே நடிக்கலாமே என்று கூறி கதையை விரிவாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அது ஒரு ஆவிக் கதையாகும். இயக்குநரும் ஆர்வத்துடன் கதையை விவரிக்க ஆரம்பித்தார். சீன் பை சீனாக விழி விரிய கேட்டுக் கொண்டு வந்த நமீதா கதையை அவர் சொல்லி முடித்தவுடன், சாரிப்பா, இதில் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம். என்னங்க இது நல்லாத்தானே போய்ட்டிருந்துச்சுச என்று இயக்குநர் குழப்பமாகி, ஏன் மேடம் என்று கேட்டுள்ளார். அதில் ஆவி ஒன்று என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போல சீன் வருகிறதே அதனால்தான் வேண்டாம் என்கிறேன் என்றார். ஏன் மேடம் கனவில்தானே அப்படி வருகிறது என்று கேட்க, அது குறித்துக் கூட எனக்குப் பிரச்சினையில்லை, உறவு வைத்துக் கொள்வது போல நடிக்கவும் நான் தயார்தான். ஆனால் அது பெண் ஆவி ஆச்சே... எப்படி முடியும் என்றாராம். எனக்கு ஓரினச் சேர்க்கை என்பது பிடிக்கவே பிடிக்காது. அதை நான் ஆதரிக்க மாட்டேன். நடிப்புக்காகவோ அல்லது விளையாட்டுக்காகவோ கூட அதை நான் ஆதரிக்க மாட்டேன் என்று கூறி விட்ட நமீதா, இந்தப் படத்தில் நடிக்க முடியாது, தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.

25 மே 2012

கார்த்திக்கு 35வது பிறந்தநாள்!

கார்த்தி சிவகுமார் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகர் சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்பதையும் தாண்டி திரையிலகில் கார்த்தி தனக்கென்று ஒரு பெயரை எடுத்துள்ளார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது நடிப்பு பேசப்படுகிறது.
இப்படி நடிப்பில் வெளுத்து வாங்கி ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும் கார்த்தி இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திருமணத்திற்கு பிறகும் வரும் முதல் பிறந்தநாள் இது. அதனால் அவர் மனைவியுடன் ஸ்பெஷலாக பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர் சாலக்குடியில் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் உள்ளார்.
சின்சியரான கார்த்திக்கு இன்று இரவு கேக் வெட்டி பிரம்மாண்டமான பிறந்தநாள் பார்ட்டி கொடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமி்ன்றி அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். புளியந்தோப்பில் ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்கப்படுகிறது. மேலும் வட சென்னையில் கால்பந்து போட்டி மற்றும் கபடி போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன.
கார்த்தி ரசிகர்களுக்காக அவரது சகுணி படத்தில் இருந்து 2 காட்சிகள் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சகுணி அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அலெக்ஸ் பாண்டியன் படத்தை அடுத்து அவர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் நடிக்கிறார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி...

23 மே 2012

இலங்கை கடற்கரையை சூடாக்கிய சன்னி லியோன்!

Sunny Leoneஆபாச படங்களில் இருந்து பாலிவுட்டுக்கு வந்துள்ள நடிகை சன்னி லியோன் ஜிஸ்ம் 2 படத்திற்காக இலங்கையின் ரம்மியமான கடற்கரைகளில் பிகினி அணிந்து நடித்துள்ளாராம்.
பாலிவுட்டுக்கும், பிகினிக்கும் அவ்வளவு ராசியாகிவிட்டது. முன்பெல்லாம் ஹாலிவுட் நடிகைகள் தான் பிகினி அணிந்து சன் பாத் எடுப்பார்கள். ஆனால் இப்போது பாலிவுட் படங்களில் பிகினி உடையில் வர நடிகைகளிடையே போட்டி நிலவும் நிலை உள்ளது. பிகினி அணிந்து நடிப்பதற்காகவே சில நடிகைகள் உடலை குறைக்கின்றனர் என்றால் பாருங்களேன்.
ஆபாச படங்களில் நடிக்கும் சன்னி லியோன் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. அங்குள்ள அழகான கடற்கரைகளில் சன்னி பிகினி அணிந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த படங்களை இயக்குனர் மகேஷ் பட் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஜிஸ்ம் 2 படத்தில் பிகினி காட்சி தவிர ரந்தீப் ஹூடாவுடன் படுக்கையறைக் காட்சிகளிலும் சன்னி லியோன் நடித்துள்ளார். அவ்வாறு படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும் போது அவர் மிகவும் கூச்சப்பட்டதாக இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
நாலு சுவருக்குள் வெட்கப்படுகிறார் சன்னி, ஆனால் வெட்ட வெளியில் படு குஷாலாக நடிக்க வெட்கப்பட மாட்டாராம்...

20 மே 2012

அசினை நடிக்க வைக்கக் கூடாது!

 இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினை தன் படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக் கூடாது என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எந்த நடிகர் நடிகையும் செல்லக் கூடாது என்ற தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசின், ரெடி படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டார்.
இதனால் அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதைக் கண்டு கொள்ளவில்லை அசின். சினிமா உலகினரும் இதெல்லாம் சகஜம் என்று மறந்துவிட்டனர்.
அதற்குப் பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்த காவலன் படம் கூட வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் ஷங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினத்தை உலக தமிழர்கள் இப்போது கடை பிடிக்கின்றனர்.ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டு மின்றி ராஜபக்சேயுடன் விருந்தும் சாப்பிட்டார்.
ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

16 மே 2012

அடுத்த சண்டையை ஆரம்பித்தார் வனிதா!

Vanitha Fights With Her 2nd Husband For Daughter நடிகை வனிதா விஜயகுமார் இப்போது தனது அடுத்த சண்டையை ஆரம்பித்துள்ளார். இந்த முறை இரண்டாவது கணவர் ஆனந்த ராஜனுடன்!
வனிதாவுக்கும் நடிகர் ஆகாஷூக்கும் முதலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
பின்னர் ஆகாஷூகும் வனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, விவாகரத்து பெற்றனர். ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெய் நிதா என்ற பெண் குழந்தை பிறந்தது.
வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷூக்கும் பிறந்த குழந்தை ஸ்ரீஹரியை யார் வைத்துக் கொள்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் நீதிமன்றம் சென்றனர். தாயாருடன்தான் அந்த சிறுவன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தந்தையுடன்தான் இருப்பேன் என்று அந்தப் பையன் அடம் பிடித்ததால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
மகனுக்காக ஆனந்தராஜை பிரிந்தார். மீண்டும் முதல் கணவர் ஆகாஷூடனேயே சேர்ந்து விட்டார் வனிதா. இருவரும் சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். ஆனந்தராஜுக்குப் பிறந்த ஜெய் நிதாவையும் தன்னுடனே வைத்திருந்தார் வனிதா.
இதற்கிடையில் ஆனந்தராஜ் நேற்று நள்ளிரவு வனிதா வீட்டில் புகுந்து தனது மகள் ஜெய் நிதாவை அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மகளை காணாமல் வனிதா திடுக்கிட்டார். பிறகு ஆனந்தராஜ் வீட்டில் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.
உடனேயே அவர் வீட்டுக்கு சென்று மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் ஆனந்தராஜ் கொடுக்க மறுத்தார். மகளை கவனிக்காமல் ஒதுக்குவதாக வனிதா மேல் அவர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் வனிதா அங்கிருந்து போகாமல் ஆனந்தராஜ் வீட்டுக் கதவை தட்டி நீண்ட நேரம் ரகளை செய்ததாக கூறப்படுறது. அக்கம் பக்கத்தினர் திரண்டு தகராறை வேடிக்கை பார்த்தார்கள்.
அடுத்து ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். நீதிமன்றம் செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

14 மே 2012

திரிஷாவும் அன்னையர் தினமும்!

விளம்பர பட ஷூட்டிங்கில் நடிக்க மைசூர் சென்றதால் த்ரிஷாவால் அன்னையர் தினத்தை அம்மாவுடன் கொண்டாட முடியாமல் போனது.
நடிகை த்ரிஷா அம்மா உமாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அம்மா, மகள் பாசம் அனைவரும் அறிந்ததே. த்ரிஷா இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் யார் என்று யாரைக் கேட்டாலும் உமா என்பார்கள். த்ரிஷாவும் அடிக்கடி இதைத் தான் கூறி வருகிறார். நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்றால் அதற்கு என் அம்மா தான் காரணம் என்று பெருமையாக சொல்வார்.
நேற்று அன்னையர் தினமாச்சே த்ரிஷா எப்படி கொண்டாடினார் என்று கேட்காதீர்கள். ஏனென்றால் விளம்பர பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக த்ரிஷா மைசூருக்கு சென்றுவிட்டாராம். இதனால் அம்மாவுடன் அன்னையர் தினம் கொண்டாட முடியவில்லையாம். இருப்பினும் டுவிட்டரில் அவர் தனது அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நான் அதிகம் நேசிக்கும் மற்றும் நான் இன்றைக்கு நானாக இருக்க காரணமான எனது அம்மாவுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். ஐ லவ் யூ அம்மா.
மேலும் செல்போனில் தொடர்பு கொண்டும் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த தம்மு படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழில் சமர், என்றென்றும் புன்னகை மற்றும் பூலோகம் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார் த்ரிஷா.

11 மே 2012

தி டர்ட்டி பிக்சரில் நயன்தாரா!

இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற தி டர்ட்டி பிக்சர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார்.
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை 'த டர்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் தயாராகி ரிலீசானது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
சில்க் ஸ்மிதா குடும்பத்தினர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தாலும், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
டர்டி பிக்சர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அப்படத்தை வேறு மொழிகளில் படமாக்க தயாரிப்பாளர்களை தூண்டி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் ரீமேக் ஆகிறது.
இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்தது. அனுஷ்கா, நிகிதா, ரிச்சா ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.
அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதால் நயன்தாரா கேட்கும் சம்பளத்தைக் கொட்டித் தர தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளார்களாம்.

06 மே 2012

அஜீத் என்றால் சம்பளம் வேண்டாம்!

Bindu Madhaviஅஜீத் குமாருடன் நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார் நடிகை பிந்து மாதவி.
ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு ஹீரோவுடன் நடிப்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். அந்த வகையில் நடிகை பிந்து மாதவிக்கு அஜீத் குமாருடன் நடிப்பதே லட்சியமாம். ஒரு படத்திலாவது 'தல' கூட நடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்.
அது மட்டுமல்ல அஜீத் கூட நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார். இது மட்டுமல்ல பிந்து மாதவி பள்ளியில் படித்த காலத்தில் இருந்து அஜீத்தின் தீதீதீவிர ரசிகையாம். அஜீத்தின் எந்த படம் வந்தாலும் முதல் நாளே அடித்துபிடித்து போய் பார்த்துவிட்டு தான் மறு வேலையாம்.
இந்தியில் சக்கைப்போடு போட்ட தி டர்ட்டி பிக்சரை தமிழில் ரீமேக் செய்தால் சில்க் வேடத்தில் நடிக்கத் தயார் என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ட்ர்ட்டியாக நடிக்கவிருப்பது உயர்ந்த மனுஷி அனுஷ்கா.
ஆந்திராவில் பிறந்தவராக இருந்தாலும் பிந்து படித்தது எல்லாம் வேலூர் விஐடியில்தான். அப்போதுதான் மாடலிங்கில் நுழைந்தார், அப்படியே சினிமாவிலும் விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

04 மே 2012

திரிஷாவிற்கு 29!

trisha-krishnan-hot-photo-stills _11_.jpgநடிகை த்ரிஷா இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன் மூலம் 'மூத்த' நடிகைகள் வரிசையில் திரிஷாவும் இணைகிறார்.
மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்ற த்ரிஷா பிரஷாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் ஒரு சில சீன்களில் வந்து சென்றார். அதன் பிறகு பிரியதர்ஷனின் லேசா லேசா படம் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து கோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். கோலிவுட் தவிர்த்து அவர் தெலுங்கு படங்களிலும் ஒரு கலக்கு கலக்கியவர். அண்மையில் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடித்த தம்மு சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
தமிழில் நண்பர் விஷாலுடன் சமர், அடுத்து ஜெயம் ரவியுடன் பூலோகம் மற்றும் என்றென்றும் புன்னகை என்று அவர் பிசியாகவே உள்ளார். சொல்ல மறந்துட்டோம் பிரியதர்ஷனின் கட்டா மீட்டா படம் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் சென்று வந்துள்ளார். இப்படி ஓடி, ஓடி உழைக்கும் த்ரிஷா இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா. அதுவும் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதே பொலிவுடன் இருக்கும் த்ரிஷா பிறந்தநாளுக்கு பார்ட்டி இல்லாமலா? எல்லாம் இருக்காம்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் த்ரிஷா!

01 மே 2012

பிரசன்னா, ஸ்னேகா தனிக்குடித்தனம்!


Sneha and Prasannaநடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை ஸ்னேகாவுக்கும் வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

இது குறித்து இருவரும் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதன் விவரம்:

கேள்வி: திருமணத்துக்குப் பிறகு ஸ்னேகா நடிப்பாரா?

பிரசன்னா பதில்: திருமணத்திற்குப் பிறகும் ஸ்னேகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அவர் ஒரு நல்ல நடிகை. திருமணத்திற்குப் பிறகு அவர் விரும்பினால் நடிக்கலாம், நடிக்காமலும் இருக்கலாம். அவருக்கு நான் முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்.

கேள்வி: உண்மையிலேயே நீங்கள் இருவரும் எத்தனை ஆண்டுகளாக காதலித்தீர்கள்?

பிரசன்னா பதில்: கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தோம். எங்கள் வீடுகளில் சம்மதம் கிடைத்த பிறகே அது பற்றி வெளியே சொன்னோம்.

கேள்வி: உங்களில் யார் முதலில் காதலைச் சொன்னது?

பிரசன்னா பதில்: நாங்கள் முதலில் நண்பர்களாக இருந்தோம். பின்பு காதல் வந்த பிறகு திருமணம் செய்து கொண்டால் என்ன என்று நினைத்தோம். நான் அவருக்கு கணவராகவும், அவர் எனக்கு மனைவியாகவும் வந்தால் எப்படி இருக்கும் என்பது பரஸ்பரம் புரிந்து கொண்டோம். வாழ்க்கை பற்றி எங்களுக்கு ஒரே மாதிரியான அபிப்ராயம் இருந்தது.

கேள்வி: உங்கள் திருமணம் எந்த முறைப்படி நடக்கும்?

பிரசன்னா பதில்: ஸ்னேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் முதலில் நாயுடு முறைப்படியும் பிறகு எங்கள் பிராமண முறைப்படியும் நடக்கும். நான் ஸ்னேகா கழுத்தில் 2 முறை வலுவாக தாலி கட்டுவேன்.

கேள்வி: திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனமா, கூட்டு குடித்தனமா?

பிரசன்னா பதில்: ஸ்னேகாவுக்கு சாதாரண பெண் போன்று சமையல் எல்லாம் செய்ய ஆசை. அதனால் நிச்சயம் தனிக்குடித்தனம் தான் என்றார்.

அதன் பிறகு ஸ்னேகா கூறுகையில்,

நான் கடந்த 12 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளேன். இத்தனை ஆண்டுகளும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணம் முடிந்த பிறகு அதைப் பார்க்கலாம் என்றார்.

29 ஏப்ரல் 2012

ரீமா விரும்பும் வேடம்!

Reema Senகல்யாணத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழில் ரீவிசிட் அடிக்கும் ரீமா சென் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில் கிளாமர் பகுதி நிறைய இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டுள்ளாராம்.
ரீமா சென்னுக்கு தமிழ் உள்பட எந்த மொழியிலும் வாய்ப்பில்லாமல் போனதால் அவர் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை கல்யாணம் செய்து கொண்டு சற்றே ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹனிமூன் டிரிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
விஜய் தான் உருவாக்கியுள்ள கில்லி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்யப் போகிறார். இதுதான் விஜய் தயாரிப்பில் உருவாகும் முதல் படம். இபப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரீமா சென் வருகிறார்.
இந்த கேரக்டர் தனக்கு தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ரீமா சென். இப்படத்தின் கதாநாயகி ரீமா சென் அல்ல என்றாலும் கூட படத்தின் கதையோட்டத்தில் ரீமாவுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த நிலையில் இந்த கேரக்டரிலும் தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று கூறியுள்ள ரீமா, அதற்கேற்றார்போல கிளாமரான முறையில் கேரக்டரை வடிவமைக்குமாறு இயக்குநரிடம் அன்புக் கோரிக்கை வைத்துள்ளாராம்.
இயக்குநர் 'சரீமா' என்று சொன்னாரா என்பது தெரியவில்லை...!

24 ஏப்ரல் 2012

பிரசன்னா,சினேகா திருமண அழைப்பு!

Prasanna and Snehaநடிகை சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் மே 11-ந்தேதி திருமணம் நடக்கிறது. இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலாகி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

முகூர்த்த ஆடைகள், நகைகள் வாங்குதல் என இத்தனை நாள் தீவிரமாக இருந்தவர்கள், இப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளனர்.
சக நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு தனித்தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களில் கமல், அஜீத், விஜய் போன்றோருக்கு பிரசன்னா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தார்.
இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "விஜய், அஜீத் போன்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தேன். இருவரும் குடும்பத்தினருடன் என்னை சந்தித்தனர். வாழ்த்தும் சொன்னார்கள். சினேகாவிடம் டெலிபோனில் வாழ்த்து கூறினார்கள். கமல்ஹாசனை ஏற்கனவே சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தோம்," என்றார்.
ரஜினிக்காக காத்திருக்கிறோம்..
அடுத்து ரஜினிக்கும் அழைப்பிதழ் கொடுக்க காத்திருக்கிறார்கள் சினேகாவும் பிரசன்னாவும். கேரளாவில் கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்து ரஜினி வந்ததும் சந்தித்து அழைப்பு தருகின்றனர்.
கோச்சடையானில் ரஜினி தங்கையாக நடிக்கவிருந்து, பின்னர் நீக்கப்பட்டார் சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஏப்ரல் 2012

தமன்னாவிற்காக குடியுங்க!

Tamannaahஃபேண்டா கூல்டிரிங்க்ஸ் குடித்தால் நடிகை தமன்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கொக கோலா நிறுவனத்தின் கூல்டிரிங்கான ஃபேண்டாவின் தென்னிந்திய பிராண்டு அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை ஜெனிலியா திருமணமாகிப் போனதையடுத்து தான் தமன்னா பிராண்டு அம்பாசிடராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைக் கவர ஃபேண்டா புது முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்கப்படும் ஃபேண்டா பாட்டில்களின் லேபிலுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் தமன்னாவை சந்தி்ககும் வாய்ப்பு கிடைக்கும்.
ஃபேண்டா விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்துகொள்கிறார். அவர் தனது ரசிகர்களை விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பேசவிருக்கிறார். தமன்னாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அழகிய செல்போன்கள் உள்பட பல பரிசுகளை வெல்லலாம்.
என்ன ஃபேண்டா வாங்கியாச்சா?

25 மார்ச் 2012

குத்தில் கலக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி!

எங்க ஊரு மாரியம்மா .. உள்பட பல அம்மன் பாடல்களுக்குப் பெயர் போன எல்.ஆர்.ஈஸ்வரியை இப்போது தமிழ் சினிமாக்காரர்கள் குத்துப்பாட்டுகளுக்கு மொத்தமாக குத்தகை எடுத்து விட்டார்கள் போல. ஒஸ்தியில் இடம் பெற்ற குத்துப் பாட்டைத் தொடர்ந்து இன்னொரு குத்துப் பாட்டுக்குக் குரல் கொடுத்துள்ளார் ஈஸ்வரி.
எலந்தப் பயம், துள்ளுவதோ இளமை, பட்டத்து ராணி பார்க்கும் பார்வை உள்பட பல ஹஸ்க்கியான பாடல்களைப் பாடி பெரும் பிரபலம் ஆனவர் ஈஸ்வரி. இதே ஈஸ்வரி பாடிய வாராயோ தோழி வாராயோ என்ற அருமையான பாடல் இன்றளவும் திருமணக் கூடங்களில் முக்கியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பின்னாளில் அம்மன் பாடல்களுக்கு அக் மார்க் முத்திரையாக ஈஸ்வரியின் குரல் விளங்கியது. இப்படி எந்தப் பாடல் பாடினாலும் அதில் உச்சத்தைத் தொட்ட பெருமைக்குரியவர் ஈஸ்வரி. இந்த நிலையில் தற்போது அவரை குத்துப் பாட்டுகளுக்கு கூப்பிட ஆரம்பித்துள்ளனர்.
ஒஸ்தி படத்தில், அட்டகாசமான குத்துப் பாட்டுக்குக் குரல் கொடுத்த ஈஸ்வரிக்கு இப்போது குத்துப் பாடல்கள் பாட ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம். இந்த வயதில் இப்படி ஒரு வாய்ப்பா என்று அவரும் அசந்து போய்தான் நிற்கிறாராம். இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் தடையறத் தாக்க என்ற படத்தில் குத்துப் பாட்டுக்குப் பாடியுள்ளாராம் ஈஸ்வரி. தமன் இசையமைத்துள்ளார்.
பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான் என்று ஆரம்பிக்கும் இப்பாடலுக்கு செமத்தியான குத்தாட்டம் போடவிருப்பவர் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான தேபி தத்தா. நெய்யில் போட்டு முக்கி எடுத்த திராட்சைப் பழம் போல தகதகவென இருக்கிறார் தேபி தத்தா.
ஏற்கனவே இவர் பானா காத்தாடி, மங்காத்தா ஆகிய படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடிய அனுபவம் கொண்டவர் தேபி. இப்போது தடையறத் தாக்க படத்திலும் தனது தகதக ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
இப்பாடலை ஈஸ்வரியுடன் சேர்ந்து அருண் விஜய் பாடியுள்ளார். தெலுங்குப் பட டான்ஸ் மாஸ்டரான நோபிள்தான் இந்தப் பாடலுக்கு பட்டையைக் கிளப்பும் வகையில் ஆட்டம் அமைத்துள்ளாராம்.
இப்பாடலின் மூலம் தேபி தத்தா எங்கேயோ போகப் போகிறார் என்கிறார்கள்.

24 மார்ச் 2012

தயாராகாத பிரியாமணி!

பொதுவாக தென்னிந்திய நடிகைகளின் முதல் விருப்பம் தமிழில் அறிமுக வேண்டும், அடுத்து தெலுங்குக்குப் போக வேண்டும், பின்னர் பாலிவுட்டில் செட்டிலாக வேண்டும். வாய்ப்புகள் இல்லாமல் போனால் மலையாளம், கன்னடத்தில் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.
தேசிய விருது பெற்ற ப்ரியா மணியும் அந்த ரகம்தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம். எங்கு போனாலும், அதற்குத் தகுந்த மாதிரி தன்னைத் தயார் செய்து கொண்டு போவதே அவர் விருப்பமாம்.
பாலிவுட்டில் ஏற்கெனவே இரு படங்களில் நடித்த அனுபவம் ப்ரியாமணிக்கு உண்டு. அந்த அனுபவம் தந்த பாடமோ என்னமோ... புதிதாக வந்த இந்திப் பட வாய்ப்பு ஒன்றை மறுத்துவிட்டாராம். தேஷ்துரோஹி 2 படத்தில் மோனிகா பேடி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்களாம். ஆனால் வேண்டாம் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம் ப்ரியா மணி.
இதுகுறித்துக் கேட்டபோது, " பாலிவுட்டில் நுழைவதற்கு இப்போது நான் தயாராக இல்லை. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்," என்றார்.

18 மார்ச் 2012

சமீராவின் மதுக்கோப்பை பிரச்சனை!

மதுக்கோப்பையுடன் போஸ் தருவது போன்ற படத்தை வெளியிட்ட கேரள பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நடிகை சமீரா ரெட்டி.

விஜய் மல்லையா தொடர்பான கட்டுரை அது. எண்ட் ஆப் குட் டைம்ஸ் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், கையில் மதுக்கோப்பையுடன் சமீரா போஸ் தருவது போல படம் வெளியாகியுள்ளது.

இதனால் கொதிப்படைந்த சமீரா, அந்தப் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தென்னிந்திய மொழிப் படங்களில் தனக்கு உள்ள நல்ல இமேஜை கெடுக்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால் வழக்கு தொடர முடிவு செய்துள்ளாராம் சமீரா.

"எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கட்டுரையில் தேவையின்றி என் படத்தை வெளியிட்டுள்ளது தவறு. வருத்தமளிக்கிறது," என்றார் சமீரா.

24 பிப்ரவரி 2012

காதல் இல்லை!

மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையை நான் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் யாரையும் காதலிக்கும் நிலையிலும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பாவனா.

சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. ஒரு ரவுண்ட் வந்த பிறகு, தெலுங்குக்குப் போய்விட்டார். அங்கு கொஞ்ச காலம் பரபரப்பாக நடித்தார். இப்போது மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள நடிகரும் கிரிக்கெட் வீரருமான ராஜீவ் பிள்ளையை அவர் காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் இதை மறுத்துள்ளார் பாவனா. "ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரை நான் காதலிக்கவில்லை. இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.

ராஜீவ் பிள்ளையும் இந்த செய்திகளை மறுத்துள்ளார்.

எவ்வளவு வேகமா மறுக்கிறாங்களோ அந்தளவுக்கு தீவிர காதல் இருக்கு என்று சினிமா டிக்ஷனரி சொல்கிறது... பார்க்கலாம்!

18 பிப்ரவரி 2012

வந்தது மூன்றும் போச்சோ?

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அமலா பால் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. அமலா பாலைப் பொறுத்தவரை இது ரொம்ப ரொம்ப ஹேப்பியான சமாச்சாரம்.

ஆனால் படம் பார்த்தவர்களுக்கே மண்டைக் காய்ச்சல்.
அதர்வாவுடன் இவர் நடித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள் நேற்று பெரிய அளவில் வெளியானது. நம்பர் ஒன் டெக்னீஷியன்ஸ், நல்ல நிறுவனம், பிரமாண்ட தயாரிப்பு என அனைத்தும் இருந்தும், இந்தப் படம் ரசிகர்களைக் கொஞ்சம் குழப்பியடித்தது என்பதே உண்மை. நகர்ப்புறங்களிலேயே இந்த நிலை என்றால், இன்னும் மற்ற ஏரியாக்களில் எப்படியோ?
அடுத்து காதலில் சொதப்புவது எப்படி? - படத்தின் ரிசல்டையே தலைப்பாக வைத்த மாதிரி இருந்தது படம். சித்தார்த் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு.
இதே படம் தெலுங்கில் லவ் பெயிலியர் என்ற பெயரில் வெளியானது. அதுவும் நேற்றே வெளியாகிவிட்டது.
ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாவது இன்றைய நாட்களில் ஒரு ஹீரோயினுக்கு பெரிய விஷயம்தான். ஆனால் இந்தப் படங்களின் முடிவு, இனி இப்படி ஒரு வாய்ப்பு அமலாவுக்கு அமையுமா என கேட்க வைத்துவிட்டது!

15 பிப்ரவரி 2012

மீண்டும் சிம்புவின் ஜோடியாகிறார் நயன்?

நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.
இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.
நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும் என நம்புகிறார்களாம்!

14 பிப்ரவரி 2012

மீண்டும் கமலை எதிர்பார்க்கும் அசின்.

தசாவதாரத்தில் கிடைத்த மாதிரி கமலுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன், என்று அசின் கூறியுள்ளார்.
தமிழில் உச்சத்தில் இருந்தபோது, வந்த வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பைக்குப் போய் செட்டிலானவர் அசின். இப்போது இரண்டு மூன்று இந்திப் படங்களில் நடித்தாலும், தமிழில் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
ரஜினியின் கோச்சடையானில் ஹீரோயின் உறுதி செய்யப்படாமல் இருந்த போது, ரஜினியுடன் நடித்தால் சந்தோஷப்படுவேன், வாய்ப்பு கிடைக்குமா? என்று ஒரு கல் விட்டுப் பார்த்தார். ஆனால் அங்கு தீபிகா படுகோன் வந்துவிட்டார்.
இந்த நிலையில், கமல் - ஷங்கர் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இந்தப் படத்தில் அசின் நடிப்பதாக சிலர் 'கிளப்பிவிட்டிருந்தனர்.' ஆனால், அது வெறும் புரளி என அசின் தெரிவித்துள்ளார் (இவரே சொல்லியிருப்பாரோ!).
அவர் மேலும் கூறுகையில், "தசாவதாரத்தில் கமலுடன் நடித்தது மறக்கமுடியாதது. மீண்டும் அதுபோன்ற வாய்ப்பு வந்தால் மகிழ்வேன்.இப்போதைக்கு பேஸ்புக்கில் 'டச்'சிலிருக்கிறோம்", என்றார்.

10 பிப்ரவரி 2012

புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நயன்தாரா உதவி.

தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை நாசமாக்கிய தானே புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிக்கு நடிகை நயன் தாரா ரூ5 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
தொழிலதிபர்கள், திரை உலக நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்டோரும் தானே புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகை நயன் தாரா இன்று சந்தித்தார்.
தானே புயல் நிவாரண நிதியாக ரூ5 லட்சத்துக்கான காசோலையை அவர் முதல்வரிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயன், அனைவரும் தானே புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

04 பிப்ரவரி 2012

தாலி கட்டிய பெண்ணை கைவிட்டோடிய பிரபுதேவாவின் தந்தை!

எனக்கு தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு, ஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன், ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.
பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் தந்தை ஆவார். மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் தாரா உயர்நீதிமன்றத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம்.
பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டுப் போனார் அங்கு பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார்.
எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் என்னுடன் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு ஓடி விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டு, ஒதுங்கியிருந்தேன். என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.
பொருளாதார ரீதியாக நாங்கள் இப்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம்.
எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்றுதான் இத்தனை நாள் அமைதியாக இருந்தோம். ஆநால் இப்போது நாங்களே இவ்வளவு கஷ்டப்படுவதால், எங்களுக்கு உள்ள உரிமையை கோருகிறோம்," இவ்வாறு மனுவில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு நீதிமன்றத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
ஏற்கெனவே பிரபு தேவா எக்கச்சக்க குடும்ப சிக்கலில் உள்ளார். ரம்லத்தை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு பிரிந்துவிட்டார். அடுத்து நயன்தாராவை திருமணம் செய்வதாகக் கூறி, கொஞ்சநாள் சேர்ந்து வாழ்ந்த பிறகு, சமீபத்தில் பிரிந்துவிட்டார். இப்போது இன்னொரு நடிகையுடன் தொடர்பிலிருப்பதாகக் கூறுகிறார்கள்.
பிரபு தேவாவுக்கு முன்பே அவரது தந்தை சுந்தரமும், இதே வேலையைத்தான் செய்திருக்கிறார் என்பது இந்த வழக்கு மூலம் உறுதியாகியுள்ளது.
விதி படத்தில் மறைந்த நடிகை சுஜாதா பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது... 'குடும்ப வழக்கம்... வாழையடி வாழை'!

02 பிப்ரவரி 2012

ஒரு வழியா தப்பித்தேன்!

பெரிய நெருக்கடியி்ல இத்தனை நாள் சிக்கித் தவித்தேன். இப்போது ஒருவழியாக மீண்டுவிட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறினார்.
பிரபு தேவாவுடன் தீவிர காதலில் இருந்தார் நயன்தாரா. பிரபு தேவாவுக்காக சினிமா வாழ்க்கையைத் துறந்தார். கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார்.
ஆனால் பிரபு தேவா தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, அவர் வேறு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உறவைத் துண்டித்துக் கொண்டார்.
இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கில் பிஸியாகிவிட்ட நயன்தாரா முதல் முறையாக தனது காதல் முறிவு குறித்து மறைமுறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன். அது எனக்கு மிகுந்த நெருக்கடியில் சிக்கியிருந்தது உண்மைதான். இப்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.
இனி முழு கவனமும் சினிமாதான். இப்போது தெலுங்கு படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்கிறேன். அது ஒரு காதல் கதை.
தமிழ் திரையுலகம் எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தெலுங்கு பட உலகம் என்னை இன்னொரு படி உயரத்தில் கொண்டு போனது. இந்த இரு மொழிகளிலுமே தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

29 ஜனவரி 2012

சிறந்த ஜோடி பிரிந்தது!

விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும் நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரபுதேவா டைரக்டு செய்த வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் விவாகரத்து செய்துகொள்ள சம்மதித்தார். அதைத் தொடர்ந்து பிரபுதேவா, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி, இந்து மதத்துக்கு மாறினார். அத்துடன் சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார். ராமராஜ்யம்' என்ற தெலுங்கு படம்தான் அவர் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்பட்டது. அந்த படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் நயன்தாரா கண்ணீர்விட்டு அழுதபடி, பிரியா விடை பெற்றார். நயன்தாரா இனிமேல் நடிக்கமாட்டார்' என்று பிரபுதேவா அறிவித்தார்.
பிரபுதேவா, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்ததும், தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று நயன்தாரா எதிர்பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இருவரும் சென்னை போர்ட்கிளப்பில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபுதேவா, தன்னை ஏமாற்றிவிட்டதாக நயன்தாரா கருதினார். இதுவே அவர்களுக்குள் பூசலை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நயன்தாராவும், பிரபுதேவாவும் சுமுகமாக பேசி பிரிவது என்று முடிவு செய்ததாகவும், அதன்படி, பிரபுதேவா, நயன்தாராவை விட்டு பிரிந்து மும்பை சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாரா, பிரபுதேவாவை பிரிந்து, சொந்த ஊரான கொச்சிக்கு போய்விட்டார். அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
சந்தோசம்', மிஸ்டர் பெர்பக்ட்' ஆகிய தெலுங்கு படங்களை இயக்கிய தசரத், அடுத்து ஒரு புதிய தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். அதில், நாகார்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த படத்தின் மூலம் நயன்தாரா திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார்.
தமிழில் அஜீத் கதாநாயகனாக நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்திலும் அவர் கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இனிமேல் பிரபுதேவாவுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை, அவருடன் பேசுவதில்லை என்பதில் நயன்தாரா உறுதியாக இருக்கிறாராம். அதேபோல், பிரபுதேவாவும், நயன்தாராவுடன் போனில் பேசுவதை நிறுத்திக்கொண்டாராம்.. இரண்டுபேரின் காதல், ஒரேயடியாக முறிந்துபோய்விட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, "நான் மீண்டும் நடிக்கப்போவது உண்மை தான்'' என்று மட்டும் கூறினார்.