பக்கங்கள்

28 மே 2012

அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்... நமீதா உறுதி!

namitha kapoorஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்று ஒரு இயக்குநர் விடுத்த வேண்டுகோளை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் நமீதா. நடிப்புக்காக கூட அதை நான் விரும்பவில்லை, ஆதரிக்க விரும்பவில்லை என்று ஒரே போடாக போட்டு விட்டாராம் நமீதா. கவர்ச்சிக்குப் பெயர் போனவர் நமீதா. ஆனால் இப்போதெல்லாம் தனது கவர்ச்சியில் ஆபாசமோ, அசிங்கமோ இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் சற்று கவனமாகவே இருக்கிறார். நடிப்பதிலும் கூட சில பாலிசிகளை வைத்துக் கொண்டு தேர்வு செய்து வேடங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். முன்பு போல படங்கள் அவர் கையில் இல்லாவிட்டாலும் கூட நிறைந்த மனதுடன்தான் இருக்கிறாராம். சமீபத்தில் அவரிடம் ஒரு இயக்குநர் கதை சொல்லியுள்ளார். படத்தின் ஒரு வரிக் கதையைக் கேட்ட அவர் இம்ப்ரஸ் ஆகி, பரவாயில்லையே, நல்லாருக்கே நடிக்கலாமே என்று கூறி கதையை விரிவாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அது ஒரு ஆவிக் கதையாகும். இயக்குநரும் ஆர்வத்துடன் கதையை விவரிக்க ஆரம்பித்தார். சீன் பை சீனாக விழி விரிய கேட்டுக் கொண்டு வந்த நமீதா கதையை அவர் சொல்லி முடித்தவுடன், சாரிப்பா, இதில் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம். என்னங்க இது நல்லாத்தானே போய்ட்டிருந்துச்சுச என்று இயக்குநர் குழப்பமாகி, ஏன் மேடம் என்று கேட்டுள்ளார். அதில் ஆவி ஒன்று என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போல சீன் வருகிறதே அதனால்தான் வேண்டாம் என்கிறேன் என்றார். ஏன் மேடம் கனவில்தானே அப்படி வருகிறது என்று கேட்க, அது குறித்துக் கூட எனக்குப் பிரச்சினையில்லை, உறவு வைத்துக் கொள்வது போல நடிக்கவும் நான் தயார்தான். ஆனால் அது பெண் ஆவி ஆச்சே... எப்படி முடியும் என்றாராம். எனக்கு ஓரினச் சேர்க்கை என்பது பிடிக்கவே பிடிக்காது. அதை நான் ஆதரிக்க மாட்டேன். நடிப்புக்காகவோ அல்லது விளையாட்டுக்காகவோ கூட அதை நான் ஆதரிக்க மாட்டேன் என்று கூறி விட்ட நமீதா, இந்தப் படத்தில் நடிக்க முடியாது, தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக