பக்கங்கள்

06 மே 2012

அஜீத் என்றால் சம்பளம் வேண்டாம்!

Bindu Madhaviஅஜீத் குமாருடன் நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார் நடிகை பிந்து மாதவி.
ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு ஹீரோவுடன் நடிப்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். அந்த வகையில் நடிகை பிந்து மாதவிக்கு அஜீத் குமாருடன் நடிப்பதே லட்சியமாம். ஒரு படத்திலாவது 'தல' கூட நடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்.
அது மட்டுமல்ல அஜீத் கூட நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார். இது மட்டுமல்ல பிந்து மாதவி பள்ளியில் படித்த காலத்தில் இருந்து அஜீத்தின் தீதீதீவிர ரசிகையாம். அஜீத்தின் எந்த படம் வந்தாலும் முதல் நாளே அடித்துபிடித்து போய் பார்த்துவிட்டு தான் மறு வேலையாம்.
இந்தியில் சக்கைப்போடு போட்ட தி டர்ட்டி பிக்சரை தமிழில் ரீமேக் செய்தால் சில்க் வேடத்தில் நடிக்கத் தயார் என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ட்ர்ட்டியாக நடிக்கவிருப்பது உயர்ந்த மனுஷி அனுஷ்கா.
ஆந்திராவில் பிறந்தவராக இருந்தாலும் பிந்து படித்தது எல்லாம் வேலூர் விஐடியில்தான். அப்போதுதான் மாடலிங்கில் நுழைந்தார், அப்படியே சினிமாவிலும் விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக