பக்கங்கள்

14 மே 2012

திரிஷாவும் அன்னையர் தினமும்!

விளம்பர பட ஷூட்டிங்கில் நடிக்க மைசூர் சென்றதால் த்ரிஷாவால் அன்னையர் தினத்தை அம்மாவுடன் கொண்டாட முடியாமல் போனது.
நடிகை த்ரிஷா அம்மா உமாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அம்மா, மகள் பாசம் அனைவரும் அறிந்ததே. த்ரிஷா இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் யார் என்று யாரைக் கேட்டாலும் உமா என்பார்கள். த்ரிஷாவும் அடிக்கடி இதைத் தான் கூறி வருகிறார். நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்றால் அதற்கு என் அம்மா தான் காரணம் என்று பெருமையாக சொல்வார்.
நேற்று அன்னையர் தினமாச்சே த்ரிஷா எப்படி கொண்டாடினார் என்று கேட்காதீர்கள். ஏனென்றால் விளம்பர பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக த்ரிஷா மைசூருக்கு சென்றுவிட்டாராம். இதனால் அம்மாவுடன் அன்னையர் தினம் கொண்டாட முடியவில்லையாம். இருப்பினும் டுவிட்டரில் அவர் தனது அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நான் அதிகம் நேசிக்கும் மற்றும் நான் இன்றைக்கு நானாக இருக்க காரணமான எனது அம்மாவுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். ஐ லவ் யூ அம்மா.
மேலும் செல்போனில் தொடர்பு கொண்டும் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த தம்மு படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழில் சமர், என்றென்றும் புன்னகை மற்றும் பூலோகம் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார் த்ரிஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக