பக்கங்கள்

29 மே 2011

தமன்னா முதுகில்......!!!

தமன்னா முதுகில் பிட் எழுதி வைத்து பரீட்சை எழுதுவது போன்ற காட்சியை ஒரு படத்தில் வைத்து, கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது தெலுங்கு படமொன்று! 16 பிட் போஸ்டர்கள் செய்யாத பப்ளிசிட்டியை சமீபத்திய கலாச்சாரப்படி பொதுநல வழக்குகள் செய்து கொண்டிருக்கின்றன.
தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த இந்த புது டெக்னிக் இப்போது தெலுங்கு சினிமாவுக்கும் தாவியிருக்கிறது. தெலுங்கில் வெளியான 100 பர்‌சென்ட் லவ் என்ற படத்தில் ஒரு காட்சி. கதைப்படி நாயகி தமன்னாவின் வெள்ளை வெளேர் முதுகில் பிட் எழுதி வைத்துக் கொண்டு பின்னால் இருந்து அதை பார்த்து பார்த்து எழுதுவாராம் நாயகன் நாக சைதன்யா. அடிக்கடி அவர் தமன்னாவின் பனியனை தூக்கி தூக்கி பார்ப்பதை கண்டித்து சில பொதுநல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளன.
பொதுநல அமைப்பின் ஆக்ரோஷ ஆர்ப்பாட்டத்தால் 100 சதவீத லவ் வசூலை வாரி குவித்து விட்டதாம். குறிப்பிட்ட அந்த கிளுகிளு காட்சியை நீக்க உத்தரவு போட்ட பிறகும் கூட கட்டுக்கடங்காமல் திரிகிறதாம் ரசிகர்கள் கூட்டம். கலெக்ஷனை அள்ள இந்த புது டெக்னிக் உதவும் என நினைக்கும் பட அதிபர்கள் தங்களது படத்தில் மேற்படி காட்சியைப் போல ஒரு பிட் காட்சியை சொருகி, கண்டன அறிக்கை வெளியிடுவதற்காகவும், பொதுநல வழக்கு தொடருவதற்காகவும் சமூக நல ஆர்வலர்களை வாடகைக்கு பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுத‌ல் தகவல்.

28 மே 2011

விக்ரம்,சிம்பு இருவரின் ஜோடி தீக்ஷா.

தமிழில் விக்ரமுடன் வேந்தன் படத்தில் ஜோடி போட்டு இருக்கும் தெலுங்கு வரவு தீக்ஷா செத், அடுத்து வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகி இருக்கிறார்.
வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு, அடுத்து வேட்‌டை மன்னன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்க, நெல்சன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகனாக சிம்பு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட்டை சேர்ந்த நடிகைகள் யாரையாவது நடிக்க வைக்க எண்ணினர் சிம்புவும், இயக்குநரும். ஆனால் கடைசியாக தெலுங்கு நடிகை தீக்ஷா செத் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தவிர மொத்தம் மூன்று நாயகிகள் என்றும், தக்ஷா செத்தை தவிர மற்ற இரண்டு நாயகிகளுக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழில், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படம் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
தீக்ஷா செத், ஏற்கனவே விக்ரம் நடிக்க இருக்கும் வேந்தன் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். டாப்சி, ஹன்சி‌கா மோத்வானி ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது புதிய வரவாக வந்திருக்கும் தீக்ஷாவும், தமிழில் ஒரு ரவுண்டு வந்து கலக்க இருக்கிறார். எடுத்தவுடனே விக்ரம், சிம்பு என்று முன்னணி ஹீரோக்களுடன் தீக்ஷா ஜோடி போட்டு இருப்பது மற்ற நடிகைகள் இடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

26 மே 2011

தாவூத்தின் காதலி இலியானா.

புதிய இந்திப் படம் ஒன்றில் தாவூத் இப்ராகிம் காதலி மந்தாகினி வேடத்தில் இலியானா நடிப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதி செயலில் ஈடுபட்ட தாவூத் இப்ராகிம் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகிறது. இதில் தாவூத் இப்ராகிம் காதலியான நடிகை மந்தாகினி வேடத்தில் இலியானா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் நடிக்கும் இலியானாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், "தாவூத் இப்ராகிம் வாழ்க்கை வரலாறு பட மாவதாகவும் அவரது காதலி வேடத்தில் நான் நடிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்திப்படம் ஒன்றில் நடிக்கிறேன். அதன் கதை என்ன, எனது கேரக்டர் எப்படிபட்டது என்பதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது சொல்வேன்," என்றார்.
இலியானாவின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், "தோல்விக்கான காரணத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டுதான் நடிக்கிறேன். சமீபத்தில் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்டேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளேன்.
ஷங்கர் இயக்கும் நண்பன் படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. அங்கு நீண்ட தூரம் படகில் பயணம் செய்தோம். அது என் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாததால் காய்ச்சல் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்," என்றார்.

24 மே 2011

அது எனது தனிப்பட்ட பிரச்சனை.

சித்தார்த்தை நான் காதலிக்கிறேனா, அவரும் நானும் ஒன்றாக வசிக்கிறோமா என்பது பற்றியெல்லாம் பொதுவில் விவாதிக்க நான் தயாராக இல்லை. இதைக் கேட்க யாருக்கும் உரிமையில்லை,(வாசகர்களே உங்களுக்கும் தான்) என்று நடிகை ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.
தெலுங்கில் அனகனகா ஓ தீருடு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாஸன். இந்தப் படம் மூலம் இருவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, இப்போது இருவரும் ஹைதராபாதில் தனிக் குடித்தனம் நடத்துவதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை இருவருமே மறுக்கவில்லை. மாறாக இதையெல்லாம் ஏன் கேட்கிறீ்கள்? அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறி வருகிறார் ஸ்ருதி. இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் ஸ்ருதியிடம் சித்தார்த் விவகாரம் பற்றிக் கேட்டனர்.
அதற்கு அவர், மீண்டும் சொல்கிறேன், இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. என் சினிமா பற்றி கேளுங்கள். சந்தோஷமாக பதில் சொல்கிறேன். நானும் சித்தார்த்தும் காதலிப்பது, ஒன்றாக வசிப்பது பற்றியெல்லாம் உங்களுக்கு எதற்கு? இது முழுக்க முழுக்க தனிமனித வாழ்க்கை. அதனால் இதுபற்றிக் கேட்க வேண்டாம், என்றார்.

22 மே 2011

நட்பாக பழகினால் அதன் பெயர் காதலா?

பாலிவுட்டின் இப்போதைய ஹாட் நியூஸ் அசின், நிதின் முகேஷ் தான். இருவரும் காதல் வயப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது.
கஜினி படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு போனவர் நடிகை அசின். கஜினி படத்தின் வெற்றியை தொடர்ந்து சல்மானுடன் லண்டன் ட்ரீம்ஸ், ரெடி போன்ற படங்களில் நடித்தார். லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் இருந்தே சல்மானுக்கும், அசின் இடையே காதல் இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அதனை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில் இப்போது புதிதாக நடிகர் நிதின் முகேசை, அசின் காதலிப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
அசினுக்காக பிரபல தயாரிப்பாளர்களிடம் எல்லாம் நேரில் போய் வாய்ப்பு கேட்கிறாராம் முகேஷ். மேலும் தன்னுடைய படங்களில் அவரையே நாயகியாக நடிக்கச் சொல்லி நிர்பந்திக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை முகேஷ் மறுத்துள்ளார். எனக்கும், அசினுக்கும் அந்தமாதிரியெல்லாம் எதுவும் கிடையாது. நட்பாக பழகினாலே, அதை காதல் என்று கதை கட்டி விடுகின்றனர் என்று கூறுகிறார்.

19 மே 2011

திரையுலகிற்கு விடை கொடுக்கப்போகும் நயன்தாரா.

நடிகை நயன்தாரா திரையுலக வாழ்க்கையின் இறுதிகட்டத்தை எட்டி வருகிறார். சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பிறகு மனம் வெறுத்து போயிருந்த நேரத்தில் ஆறுதலாக இருந்த நடிகர் பிரபுதேவாவை காதலிக்கத் தொடங்கினார். பிரபுதேவா ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர் என்பது தெரிந்தும், அவருடனான காதலைத தொடர்ந்தார். பொது விழாக்களுக்கு ஜோடியாக சென்ற அவர்களுக்கு, சிறந்த தம்பதி விருதும் வழங்கி கவுரவித்தது(?) ஒரு பத்திரிகை.
இதற்கிடையில் காதல் மனைவி ரமலத்துக்கும் - பிரபுதேவாவுக்கும் இடையே விவாகரத்து தொடர்பாக மோதல் உருவானது. எப்படியும் நயன்தாராவை விட்டு விட்டு பிரபுதேவா தன்னிடம் வரமாட்டார் என்பதை புரிந்து கொண்ட காதல் மனைவி ரமலத், பிரபுதேவாவிடம் இருந்து பெரிய தொகையையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களையும் கேட்டுப் பெற்றார். பேரம் படிந்ததையடுத்து பிரபுதேவாவை விவாகரத்து செய்ய சம்மதித்தார். அடுத்த மாதம் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இது ஒரு‌புறம் போய்க் கொண்டிருக்க... இன்னொருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூலையில் நயன்தாராவை முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்துள்ள பிரபுதேவா, திருமணத்துக்கு பிறகு நயன்தாராவை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டாராம். அதனால்தான் அமமணி புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். தற்போது ஸ்ரீராம் ஜெயம் படத்தில் நடித்து வரும் நயன்தாராவுக்கு இதுதான் கடைசி படமாக இருக்கும் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். திரையுலக வாழ்க்கையில் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் பெங்களூருவில் நடந்த சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா மேடையில் பேச பலர் வற்புறுத்தியும் பேச மறுத்த நயன், சமீப காலமாகவே பொது விழாக்களையும், மீடியாக்களையும் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

16 மே 2011

இஷிதாவின் தயக்கம்.

பண்டலூன்ஸ் பெமினாவின் அழகிப்போட்டியில் கலந்து கொண்ட 'மிஸ் இந்தியா' இஷிதா சர்கார் கொலிவுட் படங்களில் நடிக்க யோசித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு பொழுது போக்கு கலை நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் அவர்.
அதில் அவர் பேசுகையில் சென்னை ஒரு அட்டகாசமான இடம், மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்கள் எல்லாம் மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கும் போது சென்னை மட்டும் தன் அடையாளத்தை இழக்காமல் அப்படியே உள்ளது.
அதன் சரித்திர புகழ் பெற்ற வேர்களும் கிளைகளும் மண்ணின் மணத்தை பரப்பி வருகின்றன. கொலிவுட்டில் வெளியாகும் அத்தனை படங்களையும் நான் விரும்பி பார்ப்பதில்லை.
கொலிவுட் நடிகர்களில் ரஜினியை மட்டும் எனக்கு பிடிக்கும். அவர் நடித்த சில படங்களை மட்டும் பார்த்துள்ளேன். அற்புதமான நடிகர் அவர்.அவரைத்தான் கொலிவுட்டின் முக்கியமான அடையாளமாக நினைக்கிறேன்.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் பதறிப்போனேன். நான் 'மிஸ் இந்தியா' ஆனதும் கோலிவுட்டிலிருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.
எனக்கு சரளமாக தமிழ் தெரியாது என்பதால் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. ஐஸ்வர்யா பச்சன் போல தமிழில் நடிக்க ஆசையும் உள்ளது.
தமிழை நன்றாக கற்ற பிறகு கோலிவுட் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன் என்று மிஸ் இந்தியா இஷிதா கூறியுள்ளாராம்.

14 மே 2011

காதலிச்சா வாழ்க்கை பாழாகிடும்!

பொதுவாக காதல் வாழ்க்கையைக் கொடுக்கும் என்பார்கள். ஆனால் இவரோ அது வாழ்க்கையைக் கெடுக்கும் என்கிறார். அவர்... நடிகை பாவனா!
'காதலித்தால் வாழ்க்கை நாசமாகிவிடும். அதனால் நான் காதலிக்கமாட்டேன்', என்கிறார் பாவனா.
'சித்திரம் பேசுதடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத்திலும் நடித்தார். தமிழில் வாய்ப்பில்லாத நிலையில் தெலுங்குக்குப் போய்விட்டார்.
தெலுங்கில் கோபிசந்தை அவர் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்தன. இதுகுறித்துக் கேட்டபோது, "சினிமாவில் கதாநாயகிகள் சீக்கிரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து இருக்கிறார்கள். காரணம், நடிகைகள் மார்க்கெட் போனதும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு கணவர், குடும்பம், குழந்தை என வாழ்க்கை முடங்கிப் போகிறது.
சினிமாவில் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் நிஜத்தில் காதல் பற்றி எதுவும் தெரியாது. காதலிச்சா வாழ்க்கை நாசமாகிவிடும். சிலர் காதலுக்காகவே உயிரை விடுவதையெல்லாம் பார்க்கிறோம். தேவையா இது... இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை நான் வெறுக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்," என்றார்.

11 மே 2011

இலியானா பாடு சிக்கலில்.

ஆந்திர திரையுலகில் நடிகை இலியானா சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்து வருகிறார். அவருக்கு தொழில் தடை விதிக்க சக்தி பட தயாரிப்பாளர் முயன்று வருகிறார். தெலுங்கில் சக்தி என்ற படத்தில் நடித்தார் இடுப்பழகி இலியானா. இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. ஒன்றரை கோடி. தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையுடன் வலம் வந்த இலியானாவுக்கு இப்போது புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.
படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும், இலியானாவுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பித்த பிரச்னை படம் ரீலிஸ் ஆன பிறகும் தொடர்ந்தது. சூட்டிங் சமயத்தில் டைரக்டர் மற்றும் ஹீரோவுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் இலியானா மீது ஏக கடுப்பில் இருந்த தயாரிப்பு தரப்பு, ரீலிசுக்கு பிறகும் அம்மணியின் ஒத்துழைப்பு இல்லாததால் கடுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டதாம். சக்தி பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர முடியாது என்று இலியானா கூறியதால், அப்செட் ஆன படக்குழுவினர், படத்தின் தோல்வியால் மெலும் அப்செட் ஆனார்கள்.
இலியானா மட்டும் பு‌ரமோஷனுக்கு வந்திருந்தால், ஓரளவு படம் இன்னும் கொஞ்ச நாள் ஓடியிருக்கும் என்று வாதிடும் தயாரிப்பாளர், இதுதொடர்பாக சங்கத்தில் முறையிட்டிருக்கிறார். முடிந்தால் கொடுத்த சம்பளத்தில் பாதியை பிடுங்குவது; இல்லையென்றால் இலியானாவுக்கு தொழில் தடை விதிப்பது என இரண்டு முடிவுகளையும் சொல்லி சங்கத்தை நெருக்குகிறாராம் தயாரிப்பாளர்.
ஏற்கனவே தமிழ் திரையுலகிற்கு எதிராக செயல்பட்ட குத்து ரம்யா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோலிவுட்டில் தொழில் தடை விதித்ததும், அதன் பிறகும் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருப்பதும் பாமர ரசிகனுக்குக் கூட தெரியுமே!

08 மே 2011

தமன்னாவுக்கும் காதல் தோல்வியாம்!

நடிகை தமன்னாவை காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் பட சூட்டிங்கின்போது இருவருக்குள்ளும் காதல் அரும்பி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின.
இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு கிசுகிசுக்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நடிகர், தமன்னாவை நேசித்ததாகவே தகவல்கள் வெளியாயின. காரணம் வீர நடிகரின் அண்ணனும் ஒரு நடிகையைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், ஒருவழியாக சம்மதம் பெற்று திருமணம் முடித்து, குழந்தை குட்டியென்று சந்தோஷமாக வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார். அதனால் நம் காதலுக்கும் பெற்றோர் பச்சைக் கொடி காட்டுவார் என எதிர்பார்த்திருந்தார். தமன்னாவிடமோ என் காதலை (பெற்றோரிடம்) சொல்ல நேரமில்லை… என்று பையா பட பாட்டை பாடிக் கொண்டிருந்தார் அந்த நடிகர்.
இதற்கிடையில் விஷயம் கேள்விப்பட்ட அப்பா, நடிகரை கண்டித்ததுடன் இனிமேல் அந்த பெண்ணுடன் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவையும் போட்டிருக்கிறார். இந்த ஜோடியை வைத்து படம் எடுக்க நினைத்த முக்கிய புள்ளிகளிடமும் ‌வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தந்தைக்குலம். அதனால் அடுத்தடுத்து சினிமாவில் ஜோடி சேர வாய்ப்பில்லாமல் போனது அந்த ஜோடிக்கு. இப்போது நிஜத்திலும் ஜோடி சேர முடியாத அளவுக்கு நடிகருக்கு திருமணத்தை நிச்சயித்து விட்டனர்.
அதனால்தான் அம்மணி இனி தமிழ்ப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம். தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் 2009ம் ஆண்டு 5 படங்களில் நடித்த தமன்னா, 2010ல் 9 படங்கள் நடித்திருந்தார். திரைக்கு வந்த ஹிட் படங்களில் எல்லாம் தமன்னா தரிசனம் ரசிகர்களுக்கு கிடைத்தது. ஆனால் 2011ம் ஆண்டில் இதுவரை அவர் நடித்து ஒரே ஒரு படம்தான் வந்துள்ளது. இன்னும் ஒரேயொரு படம்தான் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு நடிகர் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு சிலகாலம் முழுக்கு போட்டிருந்தார். பின்னர் ஒரு வழியாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்த நயன், தனக்கு ஆறுதல் சொன்ன நடிகர் பிரபுதேவாவிடம் மனதை பறிகொடுத்து, ஊரறிய கல்யாணம் பண்ண நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே வரிசையில் இப்போது தமன்னா காதல் முறிவுக்கு பிறகு தமிழ்நாட்டுப் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டேன் என்று கூறி தெலுங்கு பக்கம் ஐக்கியமாகும் முடிவில் இருக்கிறாராம்!

05 மே 2011

திரிஷா கொடுத்த விருந்து.

பிரிக்க முடியாதது த்ரிஷாவும் அமர்க்களமான பார்ட்டிகளும்தான் என்றால் மிகையல்ல. சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே விருந்து என்றால் தூள் கிளப்புவார்கள் த்ரிஷாவும் அவரது அம்மாவும் நண்பர்களுடன் சேர்ந்து. பிறந்த நாள் என்றால் கேட்கவா வேண்டும்…
நேற்று த்ரிஷாவுக்கு பிறந்த நாள். இந்த நாளை வழக்கம் போல காலையில் எழுந்து புத்தாடை அணிந்து, கோயிலுக்குப் போய்… ம்ஹூம் இந்த பிஸினஸே கிடையாது.
புதன்கிழமை அதாவது நேற்று அதிகாலை 12.01-க்கு செனடாப் சாலையில் உள்ள த்ரிஷாவின் வீடு அமர்க்களப்பட்டது. த்ரிஷாவின் அம்மா உமா மற்றும் நெருங்கிய தோழிகள் புடை சூழ கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் த்ரிஷா.
அதன் பிறகு விடிய விடிய நடந்தது பிறந்த நாள் பார்ட்டி. சமீபத்தில் வெளியான த்ரிஷாவின் படங்களில் மன்மதன் அம்பு ஏமாற்றம் தந்தாலும், பவன் கல்யாணுடன் அவர் நடித்த தீன் மார் வசூலில் சக்கைப் போடு போடுகிறது.
இந்த வெற்றிக்கும் சேர்த்து நேற்றைய நள்ளிரவு விருந்தில் போதும் போதும் எனும் அளவுக்கு நண்பர்களை கவனித்து அனுப்பினாராம் த்ரிஷா!

03 மே 2011

ரீச்சரானார் நமீதா.

இதுவரை கவர்ச்சி நாயகியாக மட்டுமே வெள்ளித்திரையை வலம் வந்த நமீதா, இனி முற்றிலும் வித்தியாசமான கேரக்டர்களில் மட்டுமே என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதிர்ச்சியடைந்து விடாதீர்கள் ரசிகர்களே...! நமீயின் இந்த முடிவு தமிழில் அல்ல... தெலுங்கில்! தமிழில் பெரிய அளவிலான பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் கரையொதுங்கியிருக்கும் நமீதா, லவ் காலேஜ் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அம்மணிக்கு யோகா டீச்சர் வேடம். டீச்சர் என்பதால் ஓரளவு மட்டுமே கவர்ச்சி காட்ட முடியும் என கூறிய நமீதாவை கிடைத்த கோணத்தில் எல்லாம் படமாக்கி, படப்பெட்டிக்குள் சுருட்டி வைத்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர்.
யோகா டீச்சர் என்பதால் தனது உ‌டல் எடையை குறைத்திருக்கும் நமீதா, உடல் ‌‌பொலிவை கூட்டியிருக்கிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை எனக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை மொத்தமாக இதில் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கப் போகிறேன், என்று கூறியுள்ளார்.
லவ் காலேஜ் படம் கன்னடத்தில் வெளியான நமீதா ஐ லவ் யூ படத்தின் டப்பிங்தான் என்ற போதிலும், அது தெரியாத அளவுக்கு படத்தில் சில மாறுதல்களையும் செய்து சேர்த்து பொலிவேற்றியுள்ளனராம். விரைவில் இந்த படமும் தமிழில் வராமலா போகும்?

01 மே 2011

முத்தம் என்றால் மொத்தமாய் கேட்ட தமன்னா.

கமலை வைத்து அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அடுத்து கமலை வைத்து ஒரு ‌காமெடி படம் ‌ஒன்றை இயக்க போகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க எண்ணினார் கே.எஸ்.ரவிக்குமார். இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தமன்னாவும் நடிக்க ஓ.கே., சொல்லிவிட்டாராம்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் கமல் படம் என்றால் முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது. இந்தபடத்தில் அதுபோன்ற காட்சிகள் ஏதும் உள்ளதா என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வர, முதலில் சற்று தயங்கிய தமன்னா பிறகு ஓ.கே., சொன்னாராம். கூடவே ஒரு கண்டிஷனும் போட்டாராம். படத்தில் முத்தக்காட்சி இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை ரூ.1.25கோடியாக கேட்டாராம். தமன்னாவின் இந்த கண்டிசனை கேட்டதும் அதிர்ந்து போய் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பும், இயக்குநர் தரப்பும்.

28 ஏப்ரல் 2011

விவசாயக் குடும்பத்தில் பெண் எடுக்கிறார் கார்த்தி.

சென்னையில் பி.இ., இன்ஜினியரிங் முடித்து அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்றவர் நடிகர் கார்த்தி. எம்.எஸ்., பட்டம் பெற்றாலும் கார்த்தியின் ஆர்வமோ நடிப்பில் தான் இருந்தது. டைரக்டர் அமீரின், பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் கார்த்தி, முதல் படத்திலேயே வித்யாசமான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பருத்திவீரன் படத்தின் வெற்றி, தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை போன்ற படங்களிலும் தொடர்ந்தது. மிககுறுகிய காலத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார் கார்த்தி. இடையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர்களுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார்.
இந்நிலையில் கார்த்திக்கு தீவிர பெண் வேட்டையில் ஈடுபட்ட அவரது பெற்றோர், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகளாகிய ரஞ்சனி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலத்தில் தங்க மெடல் பெற்றவர். இவர்களது திருமணம் வரும் ஜூலை மாதம் 3ம்தேதி நடைபெற இருக்கிறது.
வருங்கால மனைவி குறித்து கார்த்தி கூறுகையில், ரஞ்சனியை முதல்முறை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார், என்றார்.
திருமணம் முடிந்த கையோடு கார்த்தியும் - ரஞ்சனியும் அட்லான்டிக் கடலும் பசிபிக் கடலும் சந்திக்கும் பகுதியிலுள்ள தஹிட்டி தீவுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.

25 ஏப்ரல் 2011

பிரித்திவிராஜ் மும்பை பெண் நிருபரை மணக்கிறார்!

பாரிஜாதம்”, “மொழி”,“சத்தம் போடாதே”, “கண்ணாமூச்சி ஏனடா”, “வெள்ளித்திரை,” “அபியும் நானும்”, “நினைத்தாலே இனிக்கும்” உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகராக உள்ளார்.
பிருதிவிராஜூக்கும் மும்பையில் வசிக்கும் பெண் நிருபர் சுப்ரியாமேனனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் பரவின. பிரிதிவிராஜிடம் சுப்ரியா பேட்டி எடுத்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிருதிவிராஜ் இதனை மறுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை கேரள மாநிலம் பாலகாட்டில் பிருதிவிராஜூக்கும், சுப்ரியா மேனனுக்கும் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் இத் திருமணம் நடந்ததாகவும், நெருக்கமான உறவினர்கள் சிலர் மட்டுமே இதில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் 50 பேர் திருமணத்தில் கலந்து கொண்டார்களாம். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விசேஷ அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. அதை காட்டியவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மே 1-ந் தேதி திருமண வரவேற்பை எர்ணாகுளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்துகிறார். இதற்கு நடிகர்-நடிகைகளை அழைக்க திட்டமிட்டு உள்ளார்.

24 ஏப்ரல் 2011

எய்ட்சால் கவலையுறும் ப்ரீத்தி!

எய்ட்ஸ் நோயால் தலைகுனிவு ஏற்பட்டிருப்பதாக கன்னக்குழியழகி என வர்ணிக்கப்படும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா, சோகமயமாக அளித்த பேட்டியொன்றில், இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த லாரி ஓட்டுனர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேருக்கு எயிட்ஸ் நோய் பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா,ஹிமாச்சல பிரதேஷம் ஆகிய பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுனர்கள்தான் அதிக அளவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களைக் கேட்டதும் மிகவும் கவலையடைந்துவிட்டேன். லாரி ஓட்டுனர்களிடம் எயிட்ஸ் நோய் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் போனதால்தான், இந்தளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கண்டீப்பாக நான் ஏதாவது செய்தே தீருவேன். எய்ட்ஸ் நோய் அதிகரித்துக் கொண்டே போனால் அது இந்தியாவிற்கே தலைகுனிவு மட்டுமல்ல, எல்லா விதத்திலும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இதற்கான பிரச்சாரத்தில் விரைவில் ஈடுபடப் போகிறேன், என்று கூறியுள்ளார்.

22 ஏப்ரல் 2011

இரசிகர்கள் விரும்பினால் கவர்ச்சிக்கும் தயார்!

ரசிகர்கள் பார்க்க தயாராக இருந்தால் நான் நீச்சல் உடையணிந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார். புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்கா‌தவர்களே இருக்க முடியாது. தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, சமீப காலமாக தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நீச்சல் உடை, முத்தக்காட்சி, நெருக்கமான டூயட் பாடல்களில் நடிக்காத சினேகாவின் மனதில் இப்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன். குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது. நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார். சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.

20 ஏப்ரல் 2011

மலையாளத்தில் மீண்டும் ஷகீலா!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களை தனது கவர்ச்சிக் குலுக்கல் படங்களால் கதிகலங்க வைத்த ஷகிலா, 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்.
தமிழில் காமெடி ரோல்களில் அறிமுகமாகி, கவுண்டமணியின் ஜோடியாக பிரபலமான ஷகிலா, திடீரென்று மலையாளத் திரையுலகின் தவிர்க்க முடியாத அங்கமானார். அவர் நடித்த பிட் படங்களுக்கு கேரளாவிலும் ஆந்திராவிலும் ஏகப்பட்ட வசூல். 10 லட்சம் செலவழித்தால் போதும், அதைவிட பத்துமடங்கு லாபம் சம்பாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், முன்னணி ஹீரோக்களான மம்முட்டி, மோகன்லால் படங்களைக் கூட திரையிட பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் போனார்கள்.
இதனால் கடுப்பான மலையாள நடிகர்கள் சிலர் ஷகிலாவுக்கு மிரட்டல் விடும் அளவுக்குப் போனதாக செய்திகள் வெளியாகின.
அதன்பிறகு ஷகிலாவும் மலையாளத் திரையுலகை விட்டு ஒரேயடியாக ஒதுங்கினார். தமிழ், கன்னடப் படங்களில் கேரக்டர், காமெடி வேடங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். இப்போது தமிழ், கன்னடத்தில் 12க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
விரைவில் வரவிருக்கும் சண்முகிபுரம் என்ற படத்தில் தஷி இசையில் ஒரு பாடல் கூட பாடியுள்ளாராம் ஷகிலா.
மலையாளத்தில் மீண்டும் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றனவாம் அவருக்கு. இதுகுறித்து அவர் கூறுகையில், “மலை‌யா‌ளத்‌துல கி‌ட்‌டத்தட்‌ட ஏழு வருடத்‌தி‌ற்‌கு பி‌றகு தே‌ஜா‌ பா‌ய்‌ என்‌கி‌ற படத்‌தி‌ல்‌, சுரா‌ஜ்‌ சா‌ர்‌ கா‌ம்‌பி‌னே‌ஷன்‌ல நடி‌ச்‌சுக்‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌. பி‌ரி‌தி‌வி‌ரா‌ஜ்‌ முக்‌கி‌ய வே‌டத்‌தி‌ல நடி‌க்‌கி‌ற படம்‌ இது. ரொ‌ம்‌ப ரொ‌ம்‌ப முக்‌கி‌கியமா‌ன ரோ‌ல்‌. இப்‌போ‌து அங்‌கே‌ நி‌றை‌ய கமர்‌சி‌யல்‌ படங்‌களுக்‌கு கே‌ட்‌கி‌றா‌ங்‌க. எனக்‌கு கே‌ரக்‌டர்‌ ரோ‌ல்‌ தருறா‌ங்‌க. சந்‌தோ‌ஷமா‌ இருக்‌கு,” என்‌றா‌ர்‌.

17 ஏப்ரல் 2011

த்ரிஷாவின் முரட்டுத்தனம்!

என்னிடம் அன்பாக பேசினால் நானும் அன்பாக பேசுவேன், அதேசமயம் முரட்டுதனமாக பேசினால் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம், என் குணத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுகிறார் த்ரிஷா. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இம்மாதம் 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண்கள், வயதான தாத்த, பாட்டி முதல் இளைஞவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரசான்சிஸ் சேவியர் பள்ளியில் ஓட்டுபோட தனது தாயார் உமா, பாட்டி சாரதா ஆகியோருடன் 1மணிக்கு சென்றார் நடிகை த்ரிஷா. அப்போது த்ரிஷா வரிசையில் நிற்காமல் நேராக ஓட்டுபோடும் அறைக்கு சென்றார். அப்போது அவருக்கும், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாக்காளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஓட்டும்போடும் போது என்னை வரிசையில் நிற்கும்படி சொன்னது தவறல்ல. ஆனால் அந்த வாக்காளர் சொன்ன விதம் தான் தவறானது. நடிகையென்றால் என்ன கேவலமானவர்களா..? வரிசையில் நின்று ஓட்டுப்போடுங்கள் என்று அன்போடு கூறியிருந்தால் நானும் வரிசையில் நின்றிருப்பேன். ஆனால் அந்த வாக்காளர் முரட்டுதனமாக பேசியதால் நானும் அவருடன் தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று. என்னிடம் அன்போடு பேசினால், நானும் அன்போடு பேசுவேன். அதை‌விட்டு முரட்டுதனமாக பேசுபவர்களிடம் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம் என்கிறார்.

15 ஏப்ரல் 2011

"குள்ள நரிக்கூட்டம்"ஒரு பார்வை.

மதுரையில் நடக்கிற கதை. கத்தி, ரத்தம், சண்டை, ரவுடியிஸம், எலே... என்ற ஹைபிச் வசனங்கள் எதுவும் இல்லாமல் மதுரையின் மென்மையான இன்னொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபாலாஜி. சிம்பிளான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை என முற்றிலும் புதிதாகவே இருக்கிறது இந்தப் பயணம். படம் பார்க்கிற ரசிகனின் ரத்தத்தை சூடேற்றுவது அல்லது தாரைத் தாரையாக கண்ணீரை வரவழைப்பது என்ற எந்த உணர்ச்சி உசுப்பேற்றல்களும் இதில் இல்லை. தென்றலிடம் பூக்கள் தலை அசைத்து பேசுகிற மாதிரி ஒரு இதமான உணர்வு. ஹீரோ விஷ்ணு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர். தன் அப்பாவின் போன் நம்பருக்கு 1500க்கு ரீசார்ஜ் செய்கிறார், ஆனால் நம்பர் மாறி அந்தப் பணம் இன்னொரு நம்பருக்கு ரீசார்ஜ் ஆகிவிடுகிறது. அந்த போன் நம்பருக்கு சொந்தக்காரர் ஹீரோயின் ரம்யா நம்பேசன். இருவரின் மோதல் காதலில்முடிகிறது. இந்த விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரியவருகிறது. ஹீரோவின் அப்பாவுக்கு போலிஸ் என்றாலே பிடிக்காது. ஹீரோயின் அப்பா ஒரு போலிஸ்! அப்படிபோடு... காதல் கேள்விக் குறியாகிவிடுகிறது. மாப்பிள்ளை போலிஸ் ஆனால் தான் கல்யாணம் என்று ஹீரோயின் அப்பா சொல்லிவிட, காதல் நூலில் சிக்கல் அதிகரிக்கிறது. காதலுக்காக ஹீரோ போலிஸ் வேலைக்கு முயற்சிப்பதும், அவர் சந்திக்கும்நண்பர்கள், காதல் கைக்கு வந்ததா, தொடரும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்ன? என்பது மீதிக் கதை. எந்த ஜிகினா வேலைகளையும் நம்பாமல் கதையை மட்டுமே நம்பி பயணித்திருக்கும் இயக்குனரை பாராட்டாலாம். விஷ்ணு, கதைக்கு ரொம்ப பொருத்தம். படத்தில் தேவையான இடங்களில் மட்டும் மூன்று பாடல்கள். கலர் கலர் ஆட்டங்கள் எதுவும் இல்லை என்பது ரொம்பவே ஆறுதல். கொடுக்க வேண்டிய பணத்தை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நோட்டாக வாங்குவதும், பின் சில்லைரையாக்கி கடைசி ஒரு ரூபாயில் செண்டிமெண்ட் வைப்பதும் புதுசு. இது தமிழ் சினிமாவின் புது வகையான ரீசார்ஜ் காதல். ஹீரோயின் தோழி ஹீரோயினிடம், உங்களுக்கு மட்டும் எப்படிடீ காய்ச்சல் வர மாதிரி காதல் வருது... நாங்களும் அழகாத்தான் இருக்குரோம் எங்கள ஒரு பையன் காதலிக்க மாட்டேன்குறான் என்று பேசும் சில வசனங்கள் அங்கங்க நச்சுனு இருக்கு! போலிஸ் செலக்‌ஷனில் காட்டப்படும் நண்பர்கள்... இவர்கள் போலிஸா என்ற கேள்வியை எழுப்பினாலும் ஏதேதோ நடந்த தமிழ் சினிமாவில் இது ஒன்னும் பெரிய தப்பில்லை என்றே தோன்றுகிறது. படத்தின் பல இடங்களின் சிரிக்க நல்ல வாய்ப்பு.

13 ஏப்ரல் 2011

பாடகியானார் சுப்ரமணியபுரம் சுவாதி!

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை சுவாதி, அந்தபடத்திற்கு பிறகு தமிழில் காணாமல் போனார். தற்பொழுது தெலுங்கில் முகாமிட்டு இருக்கும் அம்மணி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்‌பதோடு மட்டும் இல்லாமல் இப்போது பாடகியாகவும் மாறி இருக்கிறார். தெலுங்கில் நாகசைதன்யா-தமன்னா ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் 100% லவ் என்ற படத்தில், ஏ ஸ்குயர், பி ஸ்குயர் என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் சுவாதி. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் பாடியது குறித்து சுவாதி கூறியதாவது, படத்தில் நான் பாடியதற்கு முக்கிய காரணமே தேவி ஸ்ரீபிரசாத் சார் தான். என்னுடைய குரல் நன்றாக இருக்கிறது என்று கூறி அவர் தான் கட்டாயப்படுத்தி பாட வைத்தார். தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வந்தால் பாடுவேன் என்றார்.

11 ஏப்ரல் 2011

குழப்பத்தில் இருக்கும் தமன்னா!

தெலுங்கில் தயாரிப்பாளருடன், தான் மோதலில் ஈடுபட்டதாக வந்த வதந்தியால் வருத்தத்தில் இருக்கிறார் தமன்னா. தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவிற்கு கைவசம் ஒரே ஒரு படம்(வேங்கை) மட்டுமே உள்ளது. அதுவும் முடியும் தருவாயில் இருக்கிறது. இதனால் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார் தமன்னா. அங்கு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கில் நாக சைதன்யாவுடன் 100% காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. இப்படத்தின் போது தயாரிப்பாளருக்கும், இவருக்கும் சம்பளம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை மறுத்து உள்ளார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவிற்கு வந்துவிட்டாலே கிசுகிசுக்களுக்கும், வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்காது. என்னைப்பற்றியும் நிறைய வதந்தி மற்றும் கிசுகிசுக்கள் வந்துள்ளது. அப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனால் இப்போது தயாரிப்பாளருடன் எனக்கு பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ், தெலுங்கு என இரண்டு ‌மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறேன். நான் யாரிடமும் இதுவரை பிரச்சனை செய்தது இல்லை. சம்பளம் தொடர்பாக தயாரிப்பாளருக்கும் எனக்கு எந்த மோதலும் கிடையாது. பொதுவாக ஒரு நடிகையின் சம்பளம் படத்தின் பட்ஜெட் மற்றும் அந்த நடிகையின் மார்க்கெட் நிலவரம் இரண்டையும் வைத்து தான் தீர்மாணிக்கப்படுகிறது. என்னுடைய சம்பளமும் அதுபோலத்தான் தீர்மாணிக்கப்பட்டது. தயாரிப்பாளரே எனது நடிப்பு தி‌றமையை பார்த்து சம்பளத்தை ஃபிக்ஸ் செய்தார். நான் எதுவும் சம்பளத்தை உயர்த்தி கேட்கவில்லை. படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து வெகுவாக பாராட்டினார் தயாரிப்பாளர். எனக்கும், தயாரிப்பாளருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதுபோன்ற வதந்திகளால் எனது கேரியர் பாதிக்கப்படும் என்று வருத்தத்துடன் கூறுகிறார் தமன்னா.

08 ஏப்ரல் 2011

நீதுவும் அமீரும் காதலா?

டைரக்டர் அமீரும் – நடிகை நீது சந்திராவும் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்கள். நீது சந்திரா சென்னை வரும்போதெல்லாம் காருடன் விமான நிலையம் போய் காத்துக்கிடக்கிறாராம் அமீர். இருவருக்குள்ளும் காதல் என்று ‌கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுவது பற்றி நீதுவிடம் கேட்டால், புன்னகையுடன் பதில் சொல்கிறார். நான் மாதவன், விஷால் கூட நடிச்சிருக்கேன். அவங்க புரபஷனல்ஸ். ஆனால் அமீர் அப்படியல்ல. என்னோட நண்பர். நலம் விரும்பி. நான் ரொம்ப பிரண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே பச்சக்குனு ஒட்டிப்பேன். அது மற்றவங்க கண்ணுக்கு தப்பா தெரிஞ்சா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். எனக்கு தினமும் மதிய சாப்பாடு கொடுத்தனுப்புவதே அமீரின் மனைவிதான். அந்த அளவுக்கு அவங்க என்னோட பிரண்ட். விமர்சனத்துக்கு பயந்தா சந்தோஷமா வாழ முடியாது, என்கிறார் நீது. ரொம்ப கூலான பதில்! நிஜமாக இருக்க வேண்டுமே!

07 ஏப்ரல் 2011

ஓராண்டுக்கு தொடர் பிஷி என்கிறார் ஹன்ஷிகா.

அடுத்த ஓராண்டுக்கு பிஸியாக இருப்பேன் என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார். தமன்னா, டாப்ஸி பன்னு வரிசையில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் வெள்ளாவிப் பெண் ஹன்சிகா மோத்வானி. ஆந்திராவை சேர்ந்த இவர், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அவர் நடித்து ஒரு படம் கூட ரீலிஸ் ஆகாத நிலையில் அடுத்த ஓராண்டுக்கு பிஸி நாயகியாகி விட்டார். அந்த அளவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. இளம் நடிகர்கள் மட்டுமில்லாமல் மூத்த நடிகர்கள் சிலரும் ஹன்சிகாவை தங்கள் நாயகியாக்க கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹன்சிகாவின் பார்வையோ... 3 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஹீரோக்கள் மீது மட்டுமே இருக்கிறதாம். அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் தேடி வருவது குறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியொன்றில், அடுத்த ஓராண்டுக்கு என்னோட கால்ஷீட் டைரி ஃபுல் ஆகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய வாய்ப்புகள் வருகின்றன. கதைகளை தேர்ந்தெடுத்த நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். எனது படம் ரீலிஸ் ஆவதற்கு முன்பே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை, என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் பகலவன் படத்திலும் ஹன்சிகாதான் நாயகி என்பது கூடுதல் தகவல்.

04 ஏப்ரல் 2011

தமிழில் குவியும் வாய்ப்புக்கள்.

காவலன்" படத்தின் மூலம் பிரபலமான நடிகை மித்ராவுக்கு இப்போது தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதன்விளைவு சென்னையிலேயே தங்க முடிவெடுத்து இருக்கிறார் மித்ரா. மலையாளத்தில் வெளியான "பாடிகார்ட்" படத்தின் தமிழ் ரீ-மேக்காக பொங்கலுக்கு வெளியான படம் "காவலன்". இப்படத்தில் விஜய்க்கு அடுத்து பெரிதும் பேசப்பட்ட கேரக்டர் மித்ராவின் கேரக்டர் தான். காவலனில் மதுவாக சிறிய கேரக்டரில் வந்தாலும் நடிப்பில் பட்டயை கிளப்பி அசினையே பின்னுக்கு தள்ளிவிட்டார். இதன் விளைவாக காவலன் படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதனால் சென்னையிலேயே தங்கிவிடலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார் மித்ரா. இதுகுறித்து மித்ரா கூறியதாவது, காவலன் படத்தில் நடிக்குமாறு டைரக்டர் சித்திக் என்னை அணுகியபோது உடன் ஒப்புக்கொண்டேன். காவலன் படத்தின் கேரக்டருக்கும், பாடிகார்ட் படத்தின் கேரக்டருக்கும் நிறைய வித்யாசம் இல்லை என்றாலும், தமிழக ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மலையாளத்தில் கிடைக்கவில்லை. காவலனில் என்னுடைய நடிப்பை பார்த்து நிறைய பேர் பாராட்டினார்கள். மலையாளத்தை காட்டிலும் தமிழில் சூப்பராக நடித்திருப்பதாக பலரும் கூறினர். காவலன் பட நடிப்பை பார்த்து தமிழில் நிறைய படவாய்ப்புகள் வருகிறது. தற்போது டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இப்படத்தில் நாயகியாக தீக்ஷா செத் நடிக்கிறார். படத்தில் எனக்கு துணை நடிகை ரோல் என்றாலும் மிக அழுத்தமான கேரக்டர் தான். இப்படத்தில் மாடர்ன் கேர்ளாக நடிக்கிறேன். சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. என்னை பொறுத்த வரை நடிப்பதற்கு மொழி ஒன்றும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே எனக்கு தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். பிறர் பேசுவதை புரிந்து கொள்ள முடியும். அதேசமயம் ஓரளவிற்கு பேசவும் தெரியும். தமிழில் நிறைய படவாய்ப்புகள் தேடி வருகின்றன. இதனால் இங்கேயே தங்கி நடிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.