பக்கங்கள்

16 மே 2011

இஷிதாவின் தயக்கம்.

பண்டலூன்ஸ் பெமினாவின் அழகிப்போட்டியில் கலந்து கொண்ட 'மிஸ் இந்தியா' இஷிதா சர்கார் கொலிவுட் படங்களில் நடிக்க யோசித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு பொழுது போக்கு கலை நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் அவர்.
அதில் அவர் பேசுகையில் சென்னை ஒரு அட்டகாசமான இடம், மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்கள் எல்லாம் மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கும் போது சென்னை மட்டும் தன் அடையாளத்தை இழக்காமல் அப்படியே உள்ளது.
அதன் சரித்திர புகழ் பெற்ற வேர்களும் கிளைகளும் மண்ணின் மணத்தை பரப்பி வருகின்றன. கொலிவுட்டில் வெளியாகும் அத்தனை படங்களையும் நான் விரும்பி பார்ப்பதில்லை.
கொலிவுட் நடிகர்களில் ரஜினியை மட்டும் எனக்கு பிடிக்கும். அவர் நடித்த சில படங்களை மட்டும் பார்த்துள்ளேன். அற்புதமான நடிகர் அவர்.அவரைத்தான் கொலிவுட்டின் முக்கியமான அடையாளமாக நினைக்கிறேன்.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் பதறிப்போனேன். நான் 'மிஸ் இந்தியா' ஆனதும் கோலிவுட்டிலிருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.
எனக்கு சரளமாக தமிழ் தெரியாது என்பதால் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. ஐஸ்வர்யா பச்சன் போல தமிழில் நடிக்க ஆசையும் உள்ளது.
தமிழை நன்றாக கற்ற பிறகு கோலிவுட் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன் என்று மிஸ் இந்தியா இஷிதா கூறியுள்ளாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக