பக்கங்கள்

28 ஏப்ரல் 2010

இப்படியும் நடக்கிறது!!!.


கள்ளக்காதலில் ஏற்பட்ட காமத்தால், மூன்று கள்ளக் காதல் ஜோடிகள், குழந்தைகளைத் தவிக்க விட்டு, தலைமறைவாகி விட்டனர். இதனால் மூன்று குடும்பங்களில் பத்து குழந்தைகள் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே மயிலாடிபுதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). இவரது மனைவி அம்மாபழம் (38). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மயிலாடியை சேர்ந்தவர் ஹரிகோபால் (29). இவரது மனைவி விகிலா (25). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கோவில்களில் ஏடு வாசிக்க சென்ற இடத்தில் சந்திரசேகரனுக்கும், விகிலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதற்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டதால் சந்திரசேகரனும், விகிலாவும், அவரவர் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மாயமாகி விட்டனர். மனைவி இல்லாமல் ஹரிகோபால் மூன்று குழந்தைகளுடன் தவிப்பதை பார்த்து, உறவினரான சந்திரன் என்பவர் அவருக்கும், குழந்தைகளுக்கும் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். இங்கு தங்கியிருந்த போது ஹரிகோபாலுக்கும், சந்திரனின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை சந்திரன் கண்டித்ததால் ஹரிகோபால், சந்திரன் மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். இதனால் சந்திரனின் நான்கு குழந்தைகள் தாயில்லாமல் தவிக்கின்றனர். இதுபற்றி தனித்தனியாக அளிக்கப்பட்ட புகார்கள் பற்றி அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக