பக்கங்கள்

18 ஏப்ரல் 2010

கன்டோஸ் முத்தம்!



காதலில் நகைச்சுவையும் இருக்கும்,ஆனால்


காதலே நகைச்சுவையானது அறிந்திருக்கிறிர்களா?


எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.


நானும்,எனது நண்பர்கள் மூவரும் ஒரு புற் தரையில்


அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம்,அப்பொழுது


காதல் அனுபவங்கள் பற்றி,எமக்குள் நடந்த சம்பவங்களை


கதைத்தோம்,ஆனால் காந்தன் என்ற நண்பன் மட்டும்


எதுவும் பேசாதிருந்தான்,உனக்கு காதலி இல்லையா என


நாம் அவனிடம் கேட்டோம்,ஆம் அவா யாழ்ப்பாணத்தில்


இருக்கிறா என அவன் சொன்னான்,மேலும் தொடர்ந்த அவன்,


எனது காதலி இன்னொரு பெடியனை கொஞ்ச்சிக்கொண்டிருந்ததை


நான் கண்டேன் என்றான்,இன்னொருவனை கொஞ்சி கொண்டிருந்தவள்


என்கிற,உனது காதலி என்கிற என்னடா உனது கதை என்றோம்,


அதற்கு அவன் சொன்னான்,அந்தப்பெடியன் அவளுக்கு கண்டோஸ்


கொடுத்தவனாம் அதுக்குதான் முத்தம் கொடுத்தாளாம்,


ஆனால் அவளது தலைக்கு கீழ் எல்லாம் எனக்கு என்று அவனுக்கு


சொன்னாளாம் என்றான்,நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்,


அப்போ நீ அவளைத்தான் கல்யாணம் செய்வியா என்றோம்,


ஓம்அவளைத்தான் செய்வன்,ஏனென்றால் நானும் முதல் முத்தம்


கொடுத்த நான் தானே என்றான் அவன்.


அடுத்த நண்பன் ராஜு சொன்னான்,டேய் உனது வீட்டுக்கு பக்கத்தில


தானடா நானும் வீடு எடுக்கப்போறன் என்று.


எப்படி காதல் கதை?


ரசித்திருந்தால் எமக்கும் ஒரு வரி எழுதுங்க!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக