கேரள மாநிலத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவனை பேஸ்புக் மூலம் காதலித்து அவரை வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
எர்ணாகுளம் கண்ணங்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மெடில்டா (21). அந்த பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் அழகுகலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோட்டை அருகே ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவனுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 நாள்களுக்கு முன்னர் மெடில்டா, மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற மெடில்டா, மாணவன் இருந்த அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் கதவை தட்டியும் அவர்கள் திறக்கவில்லை.இதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாரும் கதவைத் தட்டினர். கதவை திறக்க முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வதாக இருவரும் மிரட்டியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்த போலீஸார் திரும்பி சென்றுவிட்டனர்.நேற்று முன்தினம் காலை மாணவனின் பெற்றோர் மீண்டும் கதவை தட்டியும் திறக்கவில்லை. இந்நிலையில் பெற்றோர் மீண்டும் போலீஸில் புகார் செய்தனர். எஸ்ஐ லாலு தலைமையில் போலீஸார் விரைந்து சென்று, அறை கதவை உடைத்து உள்ளே சென்று இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.இதைத் தொடர்ந்து பெற்றோரின் புகாரின்பேரில் சிறுவனை பலாத்காரம் செய்ததாக மெடில்டாவை போலீஸார் கைது செய்து ராமாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.மாணவனை எர்ணாகுளம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. எனினும் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்று மாணவர் கூறியதால் அவர் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
04 ஏப்ரல் 2017
மாணவனின் வீடு புகுந்த பெண்ணால் பெற்றோர் அதிர்ச்சி!
கேரள மாநிலத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவனை பேஸ்புக் மூலம் காதலித்து அவரை வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
எர்ணாகுளம் கண்ணங்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மெடில்டா (21). அந்த பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் அழகுகலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோட்டை அருகே ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவனுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 நாள்களுக்கு முன்னர் மெடில்டா, மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற மெடில்டா, மாணவன் இருந்த அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் கதவை தட்டியும் அவர்கள் திறக்கவில்லை.இதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாரும் கதவைத் தட்டினர். கதவை திறக்க முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வதாக இருவரும் மிரட்டியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்த போலீஸார் திரும்பி சென்றுவிட்டனர்.நேற்று முன்தினம் காலை மாணவனின் பெற்றோர் மீண்டும் கதவை தட்டியும் திறக்கவில்லை. இந்நிலையில் பெற்றோர் மீண்டும் போலீஸில் புகார் செய்தனர். எஸ்ஐ லாலு தலைமையில் போலீஸார் விரைந்து சென்று, அறை கதவை உடைத்து உள்ளே சென்று இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.இதைத் தொடர்ந்து பெற்றோரின் புகாரின்பேரில் சிறுவனை பலாத்காரம் செய்ததாக மெடில்டாவை போலீஸார் கைது செய்து ராமாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.மாணவனை எர்ணாகுளம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. எனினும் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்று மாணவர் கூறியதால் அவர் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.05 மார்ச் 2017
கமலஹாசன் ஆன்ட்ரியாவின் லீலைகள் இன்று வெளியிடப்படும் என சுசித்ரா அறிவிப்பு!
இன்று மாலை 6 மணிக்கு கமலஹாஸன்-ஆண்ட்ரியா லீலை வீடியோவை வெளியிடப் போவதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் அறிவித்துள்ளார். பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டார், வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் வீடியோக்களை பார்க்கவே பலர் தூங்காமல் ட்விட்டரும், கையுமாக உள்ளனர்.இந்நிலையில் சுசித்ரா புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார். முன்னதாக அனிருத்-ஆண்ட்ரியா புகைப்படத்தை வெளியிட்ட அவர் தற்போது ஆண்ட்ரியா வேறு ஒருவருடன் இருப்பதை வெளியிட உள்ளாராம். இது குறித்து சுசி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கமல் ஹாஸன்-ஆண்ட்ரியா லீலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. தயாராகுங்கள் என தெரிவித்துள்ளார்.12 ஆகஸ்ட் 2016
ஷாருக்கானை தடுத்த அமெரிக்கா மன்னிப்பு கோரியது!
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற திரை நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதற்கு அந்நாட்டு ராஜ்ய உயர் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.அமெரிக்க வெளியுறவு துணை செயலர் நிஷா பிஸ்வால், அமெரிக்காவின் டெல்லியில் இருக்கும் இந்தியத் தூதர் ரிச்சர்ட் வர்மா ஆகியோர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.அமெரிக்காவில் நுழையும் போது பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.பாதுகாப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு மதிப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் ஷாருக்கான், ஒவ்வொரு முறையும் குடியேற்ற துறை தடுத்து வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருக்கிறார்.முன்னதாக, ஷாருக்கானின் முஸ்லிம் பெயரால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா மறுத்துள்ளது.22 ஜூலை 2016
மகனை சுட்டுக்கொல்லுமாறு குவான்டீலின் தந்தை குமுறல்!
சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டு கொல்ல வேண்டும் என்று பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பிரபல மாடல் அழகி குவான்டீல் பலூச்சின் தந்தை கூறியுள்ளார். பாகிஸ்தானில் செலிபிரிட்டி மாடல் அழகியாக வலம் வந்தவர் குவாண்டீல் பலூச். இவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து சலசலப்பை உருவாக்கி வந்தார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாக இருந்த ஷாஹித் அப்ரிதியைத் திட்டுவது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பது என தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஜூலை 14 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில், குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசிம், பலூச்சை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. தற்போது வாசிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை செய்வதற்கு முன்பு அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டதாகவும், இதனால் தான்தான் கொலை செய்தேன் என்று தனது தங்கைக்குத் தெரியாது என்றும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.இந்நிலையில் குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் "அவனை பார்த்தவுடன் சுட்டுக்கொல்ல வேண்டும். எங்களுக்கு போதை மருந்தை கொடுத்துவிட்டு, என் மகளை கொலை செய்து விட்டான். அவளை கழுத்தை நெரித்த போது எங்களை கூப்பிட்டு இருப்பாள் எங்களுக்கு கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.16 ஜூலை 2016
பாகிஸ்தானின் பிரபல மொடல் அழகி கொலை!
பாகிஸ்தானின் பிரபல மாடல் மற்றும் சோஷியல் மீடியா பிரபலமுமான குவான்டீல் பலோச், அவரது சொந்த சகோதரனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரின், நடவடிக்கையால் அதிருப்தியடைந்த சகோதரனால், குவான்டீல் 'கவுரவ கொலை' செய்யப்பட்டதாக தெரிகிறது. சோஷியல் மீடியாவான பேஸ்புக் உள்ளிட்டவற்றில் எதிர் கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வந்தவர் குவான்டீல். மாடல் நடிகையாகவும் பிரபலமானவர்.கடந்த வரும் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர். ஆனால், இந்தியா அந்த போட்டியில் வென்றதால், பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், முல்தானில் பெற்றோர் வசித்து வருவதால் ரம்ஜான் கொண்டாக அங்கு சென்றிருந்தார் குவான்டீல். நேற்றிரவு அவர் நன்கு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் சகோதரர் வசீம். இன்று காலைதான் இதுகுறித்து தெரியவந்தது. போலீசார் தலைமறைவாக உள்ள வசீமை தேடி வருகிறார்கள். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு குவான்டீல் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று வசீம் பலமுறை எச்சரித்ததாகவும், அதை குவான்டீல் புறம் தள்ளியதால் 'கவுரவ கொலை' செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.26 மே 2016
சிம்பு நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு!
![]() |
| இது நம்ம ஆளு |
16 மே 2016
நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்-ரஜினிகாந்த்
நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு மட்டும் வரும் 23-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்குப்பதிவு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. நிச்சயமாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்," என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்றார் ரஜினி.05 பிப்ரவரி 2016
காதுக்குள் வாழ்க்கை நடத்திய எறும்புகள்(காணொளி)
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் வாழ்ந்து வரும் பன்னிரண்டு வயது சிறுமி ஒருவரின் காதுக்குள் எறும்புகள் குடித்தனம் நடத்தி வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சிறுமியின் காதுக்குள் இருந்து ஆயிரம் வரையான எறும்புகள் மருத்துவர்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.அதன் காணொளியை இங்கே காணலாம்.
11 ஜனவரி 2016
பாரதிராஜாவின் கனவை நனவாக்குகிறார் பாலா!
‘என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்போற விஷயம் அது மட்டும்தான். நானும் இளையராஜாவும் மீண்டும் இணையப் போறோம். சேதுபதிக் கிழவன் மாதிரி நானே நடிக்கிறேன். போலீஸ்காரன் வேஷத்தில் சேரன் நடிக்கிறார். ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது. பிரிட்டிஷ் காலத்துக் கதை. மண்ணைப் பிழிஞ்சு, மனசைக் கரைச்சு செய்திருக்கேன்!’ என்று 2007-ல் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார் இயக்குநர் பாரதிராஜா.
இந்நிலையில், பாரதிராஜாவின் கனவுப்படத்தை இயக்க முன் வந்துள்ளார் இயக்குநர் பாலா. இதற்காக ஒரு பெரிய நடிகர் பட்டாளத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி ஆகியோர் பாலாவின் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் மனிஷா கொய்ராலாவும் இணைந்துள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஓர் இளம் நடிகை இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.
பாரதிராஜாவின் கனவுப் படம் என்று கூறப்படும் குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் பாலா எப்படி கையாளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதிருந்தே உருவாகியுள்ளது.26 செப்டம்பர் 2015
நயன்தாராவால் போக்கு வரத்துத் தடை!
சேலத்தில் புடவைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை நயன்தாரவைப் பார்க்க கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே புடவைக் கடை ஒன்றை நடிகை நயன்தாரா இன்று காலை திறந்து வைத்தார். அப்போது நயன்தாராவை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி சிறுவர்கள் முதல்
பள்ளி,கல்லூரி மாணவர்கள் வரை கூட்டம் அலைமோதியது.இதனால் சேலம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் பெண்கள்,கைக் குழந்தையோடு நெரிசலில் சிக்கி தவித்தனர்.இளம் பெண்கள் நயன் தாரவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்களின் மேல் விழுந்து நெரிசலில் சிக்கிய கொடுமையும் அரங்கேறியுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் பல பெண்களின் நகைகள் களவு போனதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதான்யா 'தானா'வந்த கூட்டம் என்ற கமெண்டும் கூட்டத்தில் எதிரொலிக்கவே செய்தது.26 அக்டோபர் 2014
பூஜா ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்!
![]() |
| பூஜா |
16 அக்டோபர் 2014
கமலஹாஷனுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறலலால் பரபரப்பு!
பாபநாசம் படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசன் மூக்கில், நடிகர் கலாபவன் மணி ஓங்கிக் குத்தும் காட்சியின்போது மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் உள்ளே போய் விட்டதால் கமல்ஹாசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதித்து எண்டோஸ்கோப்பி மூலம் ரப்பரை வெளியே எடுத்த பிறகே அவர் அபாய கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தார்.மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்' படம் தமிழில் ‘பாபநாசம்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழில் கமலஹாசன், கவுதமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தொடர்ந்து கேரளாவிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் கமலஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒருமாதமாக ஒத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது.கேரளாவில் படப்பிடிப்பு:
தொடுபுழாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. போலீசார் தாக்கியதில் மூக்கில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
ஓங்கிக் குத்திய கலாபவன் மணி:
இந்தக் காட்சியில் கமல்ஹாசனும், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்தனர். பாதுகாப்புக்காக கமல்ஹாசன் மூக்கில் ரப்பர் பொருத்தப்பட்டிருந்தது. காட்சியின்போது கலாபவன் மணி ஓங்கிக் குத்தினார். ஆனால் சற்று பலமாக குத்தி விட்டார். இதனால் ரப்பர் கமல்ஹாசனின் மூக்குக்குள் போய் விட்டது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறினார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரப்பர் அகற்றம்:
பதறிப்போன படப்பிடிப்பு குழுவினர் அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவமனையில் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் ஆபரேஷன் செய்து ரப்பரை வெளியே எடுத்தனர். ஒய்வுக்கு பின்னர் சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் கமலஹாசன் இயல்புநிலைக்கு திரும்பினார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
13 ஆகஸ்ட் 2014
பச்சையாக வலம்வரும் ஸ்ருதி!
நடிகை ஸ்ருதி ஹாசன் பச்சை குத்துவதில் தனி ஆர்வம் கொண்டவர், ஆனந்தம் கொண்டவர். இப்போது இவரது உடலின் 5 இடங்களை விதம் விதமான பச்சை அலங்கரிக்கிறதாம். முதலில் முதுகில் தமிழில் பச்சை குத்தியிருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது மேலும் நான்கு விதமான பச்சைகளைக் குத்தி பச்சை ஹாசனாக மாறியுள்ளார். நடிகைகள் பச்சை குத்துவது பேஷனாகி வருகிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை விதம் விதமான பச்சைகளுடன் நடமாடும் நடிகைகள் பலர்.ஸ்ருதி ஹாசன் முதலில் பச்சை குத்தியது அவரது முதுகில்தான். தமிழில் அதைக் குத்தியுள்ளார்.பின்னர் கையில் ரோஜா பூவை பச்சை குத்திக் கொண்டார். பின்னர் காலிலும் ஒரு பச்சையைப் பதித்தார். தற்போது 5 ஆவது முறையாக தநது கையில் ஒரு பச்சையைப் பதித்துள்ளார்.திரிஷாதான் இந்த வகையில் முதல்வர், முன்னணியில் இருப்பவர். இவர் தனது மார்பில் நெமோ என்ற மீனைப் பச்சை குத்தி அசத்தியவர். திரிஷாவின் கணக்கு இந்த வகையில் மூன்று பச்சைகளாம்.நடிகை நயன்தாரா பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தபோது தனது கையில் பிரபு என்று பச்சை குத்தினார். காதல் முறிவுக்குப் பின்னர் அதை அழிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார்.நமீதா தனது அகன்ற முதுகில் பச்சை குத்தி வைத்துள்ளார்.ரீமா சென் தனது கவர்ச்சிகரமான வயிற்றுப் பகுதியில் அழகிய பறவையை பச்சை குத்தி வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் இப்படி பச்சை நாயகியாக வலம் வருவோர் வரிசையில் குஷ்பு, சிம்ரன், சினேகா, பிரியா மணி என பலரை காணலாம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
31 ஜூலை 2014
வெற்றி வலம் வரும் ப்ரியா ஆனந்த்!
![]() |
| ப்ரியா ஆனந்த் |
23 ஜூன் 2014
இயக்குநர் ராம நாராயணன் மரணம்!
பிரபல திரைப்பட இயக்குநரான ராம. நாராயணன் மாரடைப்பால் காலமானார். சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு மரணமடைந்துள்ளார். 9 மொழிகளில் 125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் ராம.நாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கிய இயக்குநர் இவர்தான்.குறிப்பாக விலங்குகளை வைத்தும், கிராபிக்ஸ் மூலமும் பல படங்களை இயக்கி அனைவரையும் ரசிக்க வைத்தவர். விஜயகாந்த்துக்கு ஆரம்ப காலத்தில் ஏற்றம் கொடுத்த பல படங்களை இயக்கியவர். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். ராம நாராயணனிடம் உதவியாளராக இருந்தவர்தான் நடிகர் ராமராஜன். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக மாறி அதன் பின்னர் ராமராஜன் நடிகரானார் என்பது நினைவிருக்கலாம். இதேபோல இன்னொரு சிஷ்யர் இயக்குநர் பேரரசு. ராம நாராயணனின் 30 படங்களில் பேரரசு உதவி இயக்குநராக இருந்துள்ளார். 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராம.நாராயணன் காரைக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-ம் ஆண்டு தமிழக அரசின் `கலைமாமணி' விருது இவருக்கு கிடைத்தது. 1995-ம் ஆண்டு இயல், இசை, நாடக மன்ற தலைவராக பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு முதல் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக இருந்து வருகிறார். ராம.நாராயணனின் மனைவி பெயர் ராதா. மகன் ராமசாமி. மகள்கள் அன்பு, உமா. அனைவருக்கும் திருமணமாகி விட்டது.16 ஜூன் 2014
இனியா வீட்டில் திருடி மாட்டிய அக்கா கணவன்!
![]() |
| இனியா |
13 ஜூன் 2014
ஸ்ருதியின் அறைக்கதவு தட்டப்பட்டதால் பரபரப்பு!
![]() |
| ஸ்ருதி |
05 ஜூன் 2014
தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்தது.பின்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
07 மே 2014
படுக்கையில் தன்னுடன் பேய் என்கிறார் நடிகை!
பேயுடன் உடலுறவு கொள்வதாக பாலிவுட் நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடாஷா பிளாசிக். இவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.அதில் தன்னுடைய படுக்கையறையில் அடிக்கடி கண்களுக்கு புலப்படாத ஒரு உருவம் தன்மீது படுத்துக்கொண்டு இயங்குவதாகவும் அந்த அனுபவம் தனக்கு மிகவும் புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார்.தன்னுடன் உடலுறவு கொண்டது ஒரு பேய்தான் என்று தன்னால் அடித்துக் கூற முடியும் என்றும், எப்போதெல்லாம் நான் படுக்கையறையில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் இதுபோல அடிக்கடி நடக்கிறது என்றும் அவர் கூறினார்.முதன்முறையாக தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் விவரிக்கும்போது "ஒரு நாள் படுக்கையில் இருந்தபோது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. எட்டிப்பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. எனது மேல் யாரோ படுப்பது போல கனமாக இருந்தது. ஆனால் உருவத்தை பார்க்க முடியவில்லை. ஒரு அரவணைப்பை, உடலின் கதகதப்பை மட்டும் என்னால் உணர முடிந்தது. அதன்பிறகு நான் அதை அனுபவிக்க தொடங்கிவிட்டேன்" என்று கூறினார்.நடாஷா பிளாசி தற்போது பாராநார்மல் ஆக்டிவிட்டி 2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகை தானே திரைக்கதை எழுதி பேய்க்கதை விடுவதாக பாலிவுட்டில் கிசுகிசு எழுந்துள்ளது.இவரை மனநல மருத்துவர்களிடம் அனுப்ப வேண்டும் என்றும் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
29 மார்ச் 2014
கனிகா கடும் கோபம்!
![]() |
| கனிகா |
20 மார்ச் 2014
ஸ்ருதிஹாசனின் ஆபாச போஸ்டர் கிழிப்பு!
நடிகை ஸ்ருதிஹாசன் அல்லி அர்ஜூனாவுடன் நடித்துள்ள ரேஸ் குரோம் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் விளம்பரத்திற்காக ஐதராபாத் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
வானத்தை நிறுத்திவிட்டு இந்த போஸ்டர்களை கண்ட வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சில மனித உரிமை ஆர்வலர்கள் ஆபாச போஸ்டர்கள் ஒட்டபட்ட இடங்களில் போராட்டம் நடத்தியதாதவும், இதனை கண்ட போலீஸார் போஸ்டர்களை கிழித்து எரிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது போன்ற போஸ்டர்களை ஒட்ட கூடாது என்று அந்த படநிறுவனத்திற்கு போலீஸார் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
21 பிப்ரவரி 2014
குத்து ரம்யாவிற்கு எதிர்ப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை 'குத்து' ரம்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக் கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார்.ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது சமமானதுதான். கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என்று அரசின் முடிவை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. குத்து ரம்யாவை தமிழ் திரையுலகம் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
13 ஜனவரி 2014
த்ரிஷாவின் அம்மா உமாவுக்கு பிடிவாரண்டு!
நடிகை த்ரிஷா நிர்வாண குளியல் போட்டதாக வெளியான வீடியோ தொடர்பான வழக்கில் ஆஜராகாததால் அவரது அம்மா உமாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.நடிகை த்ரிஷாவைப் போன்ற ஒரு பெண் ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004-ல் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி இக்காட்சியை படமாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை வார பத்திரிகையொன்றும் வெளியிட்டது.ஆனால் த்ரிஷாவும், அவரது தாய் உமாவும் இதனை மறுத்தனர். படத்தில் இருப்பது த்ரிஷா இல்லை என்றும் மார்பிங்கில் போலியாக இப்படத்தை உருவாக்கியாதாகவும் கூறினர்.படத்தை வெளியிட்ட ஒரு வார பத்திரிகையிடம் நஷ்டஈடு கேட்டு உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணைக்கு வருமாறு உமாகிருஷ்ணனுக்கு கோர்ட்டு பல தடவை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.இதையடுத்து நீதிபதி கோபாலகிருஷ்ணன் த்ரிஷாவுக்கும், உமாகிருஷ்ணனுக்கும் கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை உமாகிருஷ்ணன் வக்கீல் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறும்போது, ‘‘நீதிமன்றம் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை. அவரது தாய் உமாகிருஷ்ணனுக்கு மட்டுமே வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம்," என்றார்.14 டிசம்பர் 2013
அஞ்சலி ஆந்திராவில் தரிசனம்!
![]() |
| அஞ்சலி |
30 நவம்பர் 2013
நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!
![]() |
| மகள் காயத்ரியுடன் ரகுராம் மாஸ்ரர் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





6792.jpg)






