பக்கங்கள்

29 மார்ச் 2014

கனிகா கடும் கோபம்!

கனிகா 
தமிழ் பட இயக்குனர்களுக்கு பக்குவம் இல்லை. திருமணம் ஆன பிறகும் கிளாமர் காட்டச்சொல்கிறார்கள் என்றார் கனிகா. பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கனிகா. அவர் கூறியதாவது: சினிமாவுக்கு வந்த புதிதில் எல்லோரும் என்னைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. பெயருக்காக படங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் வந்தால் மட்டுமே ஏற்கிறேன். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற கொள்கை எதுவும் வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு பொருத்தமான வேடமா என்று பார்க்கிறேன். இல்லாவிட்டால் நடிப்பதில்லை. என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் எனக்கு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. தமிழ் திரையுலகை பொருத்தவரை திருமணம் ஆன நடிகைகள் என்றால் அவர்களை ஓரம்கட்டவே பார்க்கிறார்கள். எனக்கு திருமணம் ஆனபிறகும் ஆடை குறைத்து கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். கிளாமர் காட்டாமல் சேலை கட்டி நடிப்பதாக கூறினேன். அதற்கு பதில் எதுவும் அவர்களிடம் இல்லை. மலையாள திரையுலகில் அப்படி இல்லை. ஹீரோயின்களை ஓரம்கட்ட மாட்டார்கள். வயதானவராக இருந்தாலும் அவரை நாயகியாக நடிக்க வைப்பார்கள். அதற்கு காரணம் மலையாள இயக்குனர்கள் பக்குவப்பட்டவர்கள் என்று  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக