பக்கங்கள்

29 செப்டம்பர் 2011

நித்யாவிற்கும் தடை!

நடிகை நித்யா மேனனை நேரில் சந்திக்க வந்த பிரபல தயாரிப்பாளரை, நித்யா மேனன் சந்திக்க மறுத்ததால், அவருக்கு நடிக்க தடைவிதித்துள்ளது மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். தமிழில் 180, வெப்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு மிக நெருங்கிய நண்பரும், கேரளாவின் முன்னணி தயாரிப்பாளருமான ஆண்டோ ஜோசப், மலையாள படமொன்றில் நடித்துக் கொண்டிருந்த நித்யா மேனனை, புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சந்தித்து பேச விரும்பினார். ஆனால் நித்யாவோ, ஆண்டோ ஜோசப்பை சந்திக்க மறுத்துவிட்டார். என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் எனது மேனஜரிடம் பேசுங்கள் என்று கூறியுள்ளார். நித்யா‌வின் இந்த பதிலை கேட்ட ஆண்டோ ஜோசப்புக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது.
உடனே இதுகுறித்து மலையாள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். மூத்த தயாரிப்பாளரை அவமதித்ததற்காக நித்யா மேனனுக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்துள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நித்யாவுக்கு நடிக்க தடை விதிக்குமாறு இருமாநில தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. இந்த தடை உத்தரவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக