பக்கங்கள்

03 செப்டம்பர் 2011

காதலை அழித்தாலும் இது மட்டும் அழியல்லையே!

காதலன் பெயரை முதுகில் பச்சை குத்திய நடிகை திவ்யா, இப்போது காதலில் கசமுசா ஏற்பட்டுள்ளதால் பச்சையை அழிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம். குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை திவ்யா, வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வந்தார். காதல் விஷயத்தில் இந்த ஜோடி ரகசியம் காத்து வந்த இந்த ஜோடி, சமீபத்தில் பெங்களூரில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஜோடியாக வந்த போது ரகசியம் அம்பலமானது.
ரமேஷ் என்ற தனது காதலரின் பெயரை நடிகை திவ்யா, தன் முதுகில் பச்சை குத்தியிருப்பதுடன். ரமேஷை என் காதலராக பெற்றது இறைவன் கொடுத்த வரம் என்று ட்விட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீப காலமாக இந்தக் காதலில் பிரச்னை முளைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்பெல்லாம் திவ்யாவை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்ளும் ரமேஷ், இப்போதெல்லாம் பேசுவதே இல்லையாம். இதனால் கோபமடைந்த திவ்யா, முதுகில் குத்திய பச்சையை அழிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக