![]() |
பூஜா |
நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
26 அக்டோபர் 2014
பூஜா ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்!
16 அக்டோபர் 2014
கமலஹாஷனுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறலலால் பரபரப்பு!

கேரளாவில் படப்பிடிப்பு:
தொடுபுழாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. போலீசார் தாக்கியதில் மூக்கில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
ஓங்கிக் குத்திய கலாபவன் மணி:
இந்தக் காட்சியில் கமல்ஹாசனும், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்தனர். பாதுகாப்புக்காக கமல்ஹாசன் மூக்கில் ரப்பர் பொருத்தப்பட்டிருந்தது. காட்சியின்போது கலாபவன் மணி ஓங்கிக் குத்தினார். ஆனால் சற்று பலமாக குத்தி விட்டார். இதனால் ரப்பர் கமல்ஹாசனின் மூக்குக்குள் போய் விட்டது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறினார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரப்பர் அகற்றம்:
பதறிப்போன படப்பிடிப்பு குழுவினர் அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவமனையில் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் ஆபரேஷன் செய்து ரப்பரை வெளியே எடுத்தனர். ஒய்வுக்கு பின்னர் சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் கமலஹாசன் இயல்புநிலைக்கு திரும்பினார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
13 ஆகஸ்ட் 2014
பச்சையாக வலம்வரும் ஸ்ருதி!
நடிகை ஸ்ருதி ஹாசன் பச்சை குத்துவதில் தனி ஆர்வம் கொண்டவர், ஆனந்தம் கொண்டவர். இப்போது இவரது உடலின் 5 இடங்களை விதம் விதமான பச்சை அலங்கரிக்கிறதாம். முதலில் முதுகில் தமிழில் பச்சை குத்தியிருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது மேலும் நான்கு விதமான பச்சைகளைக் குத்தி பச்சை ஹாசனாக மாறியுள்ளார். நடிகைகள் பச்சை குத்துவது பேஷனாகி வருகிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை விதம் விதமான பச்சைகளுடன் நடமாடும் நடிகைகள் பலர்.ஸ்ருதி ஹாசன் முதலில் பச்சை குத்தியது அவரது முதுகில்தான். தமிழில் அதைக் குத்தியுள்ளார்.பின்னர் கையில் ரோஜா பூவை பச்சை குத்திக் கொண்டார். பின்னர் காலிலும் ஒரு பச்சையைப் பதித்தார். தற்போது 5 ஆவது முறையாக தநது கையில் ஒரு பச்சையைப் பதித்துள்ளார்.திரிஷாதான் இந்த வகையில் முதல்வர், முன்னணியில் இருப்பவர். இவர் தனது மார்பில் நெமோ என்ற மீனைப் பச்சை குத்தி அசத்தியவர். திரிஷாவின் கணக்கு இந்த வகையில் மூன்று பச்சைகளாம்.நடிகை நயன்தாரா பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தபோது தனது கையில் பிரபு என்று பச்சை குத்தினார். காதல் முறிவுக்குப் பின்னர் அதை அழிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார்.நமீதா தனது அகன்ற முதுகில் பச்சை குத்தி வைத்துள்ளார்.ரீமா சென் தனது கவர்ச்சிகரமான வயிற்றுப் பகுதியில் அழகிய பறவையை பச்சை குத்தி வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் இப்படி பச்சை நாயகியாக வலம் வருவோர் வரிசையில் குஷ்பு, சிம்ரன், சினேகா, பிரியா மணி என பலரை காணலாம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
31 ஜூலை 2014
வெற்றி வலம் வரும் ப்ரியா ஆனந்த்!
![]() |
ப்ரியா ஆனந்த் |
23 ஜூன் 2014
இயக்குநர் ராம நாராயணன் மரணம்!

16 ஜூன் 2014
இனியா வீட்டில் திருடி மாட்டிய அக்கா கணவன்!
![]() |
இனியா |
13 ஜூன் 2014
ஸ்ருதியின் அறைக்கதவு தட்டப்பட்டதால் பரபரப்பு!
![]() |
ஸ்ருதி |
05 ஜூன் 2014
தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்தது.பின்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
07 மே 2014
படுக்கையில் தன்னுடன் பேய் என்கிறார் நடிகை!
பேயுடன் உடலுறவு கொள்வதாக பாலிவுட் நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடாஷா பிளாசிக். இவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.அதில் தன்னுடைய படுக்கையறையில் அடிக்கடி கண்களுக்கு புலப்படாத ஒரு உருவம் தன்மீது படுத்துக்கொண்டு இயங்குவதாகவும் அந்த அனுபவம் தனக்கு மிகவும் புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார்.தன்னுடன் உடலுறவு கொண்டது ஒரு பேய்தான் என்று தன்னால் அடித்துக் கூற முடியும் என்றும், எப்போதெல்லாம் நான் படுக்கையறையில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் இதுபோல அடிக்கடி நடக்கிறது என்றும் அவர் கூறினார்.முதன்முறையாக தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் விவரிக்கும்போது "ஒரு நாள் படுக்கையில் இருந்தபோது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. எட்டிப்பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. எனது மேல் யாரோ படுப்பது போல கனமாக இருந்தது. ஆனால் உருவத்தை பார்க்க முடியவில்லை. ஒரு அரவணைப்பை, உடலின் கதகதப்பை மட்டும் என்னால் உணர முடிந்தது. அதன்பிறகு நான் அதை அனுபவிக்க தொடங்கிவிட்டேன்" என்று கூறினார்.நடாஷா பிளாசி தற்போது பாராநார்மல் ஆக்டிவிட்டி 2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகை தானே திரைக்கதை எழுதி பேய்க்கதை விடுவதாக பாலிவுட்டில் கிசுகிசு எழுந்துள்ளது.இவரை மனநல மருத்துவர்களிடம் அனுப்ப வேண்டும் என்றும் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
29 மார்ச் 2014
கனிகா கடும் கோபம்!
![]() |
கனிகா |
20 மார்ச் 2014
ஸ்ருதிஹாசனின் ஆபாச போஸ்டர் கிழிப்பு!
நடிகை ஸ்ருதிஹாசன் அல்லி அர்ஜூனாவுடன் நடித்துள்ள ரேஸ் குரோம் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் விளம்பரத்திற்காக ஐதராபாத் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
வானத்தை நிறுத்திவிட்டு இந்த போஸ்டர்களை கண்ட வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சில மனித உரிமை ஆர்வலர்கள் ஆபாச போஸ்டர்கள் ஒட்டபட்ட இடங்களில் போராட்டம் நடத்தியதாதவும், இதனை கண்ட போலீஸார் போஸ்டர்களை கிழித்து எரிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது போன்ற போஸ்டர்களை ஒட்ட கூடாது என்று அந்த படநிறுவனத்திற்கு போலீஸார் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
21 பிப்ரவரி 2014
குத்து ரம்யாவிற்கு எதிர்ப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை 'குத்து' ரம்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக் கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார்.ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது சமமானதுதான். கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என்று அரசின் முடிவை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. குத்து ரம்யாவை தமிழ் திரையுலகம் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
13 ஜனவரி 2014
த்ரிஷாவின் அம்மா உமாவுக்கு பிடிவாரண்டு!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)